Search This Blog

Followers

Powered By Blogger

Thursday, October 30, 2025

பூ மழையே 2

 


அத்தியாயம் 2


          காவல் நிலையத்தில் தலைக்கு கைக் கொடுத்து அமர்ந்திருந்த ரங்கநாயகி பலமான யோசனையில் இருந்தார். இந்த திருமணத்தை நிறுத்த கண்மணி எடுத்த முயற்சிகள் அத்தனையையும் அவளுக்கே தெரியாமல் தகர்த்தெறிந்து விட்டேனே, பிறகு எப்படி இது நடந்தது என்ற சிந்தனையில் இருந்தார். 


      கடைசி நேரத்தில் கண்மணி தனது ஆசிரியரின் மூலமாக, கல்வி தான் முதன்மை என்று தனது தந்தையிடம் பேச வைத்து, அவரது மனதை மாற்றி திருமணத்தை நிறுத்த எண்ணியிருந்தாள். அதற்காக பல முன் ஏற்பாடுகளையும் அவள் செய்து வைத்திருக்க, ஆசிரியர் இன்று வருவதற்கு முன்பாகவே கண்மணியின் எண்ணத்தை கண்டறிந்த ரங்கநாயகி, அவரை நேரில் சந்தித்து மிரட்டி இருந்தார். 


     “இங்க பாருங்கம்மா நீங்க பண்றது ரொம்ப தப்பு, படிக்கிற பிள்ளைக்கு இப்படி அவசரமா கல்யாணம் பண்ணி வைக்கிறது எவ்வளவு பெரிய குற்றம்னு தெரியுமா? பதினெட்டு வயசு ஆனா தான் உங்களால அந்த பொண்ணுக்கு கல்யாணமே பண்ண முடியும், அதுவும் அந்த பொண்ணு சம்மதத்தோட தான் நீங்க பண்ணணும், இல்லாட்டி அது மிகப் பெரிய கிரிமினல் குற்றம்.”


    “என்னய்யா வாத்தி எல்லாம் மறந்து போச்சா என்ன? இந்த ஸ்கூலுக்கு அரசாங்கம் செஞ்சத விட எம்புள்ள தான் நிறைய உதவி பண்ணி இருக்கான்,  அதனால தான் சுத்து வட்டார சனமெல்லாம் படிக்க முடியுது.  பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டேன்னு சொன்னவங்க எல்லாரும், எம்புள்ள ஒரு சொல்லு சொல்லவும்  தான் இங்க அனுப்பி வைச்சாங்க, அதெல்லாம் மறந்து போயிடுச்சோ? நியாபகம் இருக்கட்டும் அடுத்தடுத்து வேற எந்த பிரச்சினையானாலும் நீ எங்க கிட்ட தான் வந்தாகனும், இதுல நீ என்னையவே தப்பு சொல்லறயா?


    எங்க வீட்டு பிள்ளைக்கு எப்ப கல்யாணம் பண்ணனுமுன்னு  எங்களுக்கு தெரியும். நீ அவ கூட சேர்ந்துகிட்டு இதுல மூக்கை நுழைச்சுகிட்டு இருந்த, அப்புறம் நடக்குற விளைவுகளுக்கு நான் பொறுப்பில்ல  பார்த்துக்க.


   ஆமா யார் சொன்னா அவளுக்கு இன்னும் பதினெட்டு வயசு ஆகலைன்னு? நாங்க லேட்டா ஸ்கூல் சேர்த்ததால அவளோட வயசு கம்மியாகிடுமா? அவளுக்கு பதினெட்டு வயசு பிறந்து இரண்டு வாரம் ஆகுது, இதோ இது தான் அவ பிறப்பு சான்றிதழ்.”


   அந்த சான்றிதழை கண்டு அதிர்ந்து நின்றார் சுப்பிரமணியம் வாத்தியார், ஏனென்றால் அவரும் இதே ஊரில் தானே இருபது வருடங்களாக வசித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு நிச்சயமாக தெரிந்தது இது போலி என்று. ஆனால் என்ன சொல்லி நிரூபிப்பது. அவரது தீவிரமான முகபாவனையை கண்டு, கைகளில் இருந்த சான்றிதழை வெடுக்கென்று பிடுங்கியவர், 


    “அவளுக்கு பதினெட்டு வயசாச்சு, இதுக்கு மேல அதை இதை சொல்லி கல்யாணத்தை நிறுத்த பார்த்தேன்னு வச்சுக்க, அப்பறம் பள்ளிக் கூடத்துக்குள்ள பேய் இருக்குன்னு  புரளியை கிளப்பி, ஊருல இருக்க அத்தனை பிள்ளைங்களையும் படிக்க விடாம பண்ணிருவேன்.”


     “என்னம்மா இப்படி எல்லாம் பேசறீங்க?”


     “ஆமா நீ நான் சொல்லறதை  கேட்காட்டி நான் அப்படி தான் பண்ண வேண்டி இருக்கும். உனக்கு என் பேத்தி கல்யாணத்தை நிறுத்தனுமா, இல்ல ஊர்ல இருக்கிற மத்த பிள்ளைங்க படிக்கணுமா? அவ ஒருத்திக்காக மத்த பிள்ளைகளோட படிப்ப விட்டுத் தர போறியா? பள்ளிக்கூடத்துக்குள்ள பேய் இருக்குன்னு ஒரு புரளியை மட்டும் கிளப்பி விட்டா போதும், இந்த ஊருக்குள்ள ஒருத்தனும் தன் பிள்ளைகளை படிக்கறதுக்கு அனுப்ப மாட்டான். அப்புறம் அங்க உனக்கென்ன வேலை? அதனால பெரிய மனுசனா கல்யாணத்துக்கு வந்தமா அட்சதைய  போட்டோமான்னு இருக்கணும், வேற ஏதாவது குட்டையை குழப்பிக்கிட்டு இருந்த அவ்வளவு தான்.”


     அவருக்கு தன் வேலையைப் பற்றி கூட கவலை இல்லை, ஆனால் தற்போது தான் ஊர் பெரியவரான கிருஷ்ணமூர்த்தியின் சொல் கேட்டு, அந்த ஊர் மக்கள் அனைவரும் குழந்தைகளை பள்ளிக்கு படிக்க அனுப்பி கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் அவரது தாயே இப்படி ஒரு செயலை செய்தாறென்றால் என்னவென்று சொல்வது? 


   அதோட கிருஷ்ணமூர்த்திக்கு தன் தாய் என்றால் எவ்வளவு இஷ்டம் என்று இந்த ஊருக்கே தெரியுமே, அதனால் தான் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றவரை பார்த்து, ஏளன சிரிப்பை உதிர்த்த ரங்கநாயகி, 


    “ஒழுங்கு மரியாதையா கவர்மெண்ட் கொடுக்கற காசோட நான் கொடுக்கற காசையும் வாங்கி வச்சுகிட்டு வேலையை பார்த்துகிட்டு இரு, அதை விட்டுட்டு எனக்கு எதாவது குடைச்சல் குடுக்க நினைச்சே, அதுக்கப்புறம் இந்த பள்ளிக்கூடமே இருக்காது ஞாபகத்துல வச்சுக்கோ.”


     அப்படி அவரை மிரட்டி தனது காரியத்தை சாதித்தவர், திருமணத்திற்கு முதல் நாள் நடந்த நிச்சயத்தில் சங்கீத் பங்க்ஷனின் போது,  கூலிங் கிளாஸ் சகிதம் தனது கூட்டாளிகளோடு இணைந்து, கோல்டன் ஸ்பேரோ பாட்டுக்கு அட்டகாசமாக ஆடிக் கொண்டிருந்தார். அவரது ஆட்டத்தை பார்த்த கண்மணிக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. 


   இந்தக் கிழவி இவ்வளவு கான்ஃபிடன்ட்டா இருக்குதுன்னா ஏதோ ஒரு வேலை பார்த்திருக்குன்னு அர்த்தம் என்று மனதில் எண்ணியவள், உடனே அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்தவள், பாத்ரூம் செல்வதாக கூறிவிட்டு அறைக்குச் சென்று, தனது தோழி கவிதாவிற்கு அழைத்திருந்தாள். 


   கவிதா அவளது உயிர் தோழி, சிறுவயதில் இருந்தே அவளுடன் படிப்பவள், கவி என்று அவள் ஆரம்பிப்பதற்கு முன்பே அங்கு கவிதா சுப்பிரமணியம் வாத்தியார் தற்போது தனது வீட்டில் தான் இருப்பதாகவும், தனது தந்தையிடம் ரங்கநாயகி பேசியவற்றை கூறி புலம்பிக் கொண்டிருப்பதாகவும், ஒன்று விடாமல் கூறினாள். 


  “நல்ல வேலை கண்மணி, என் பாட்டி காமாட்சி தன் சிநேகிதியோட ஆட்டம் போட கல்யாண வீட்டுக்கு போயிடுச்சு, இல்லாட்டி இங்க நடக்கறதை எல்லாம் ஒன்னு விடாம உன் பாட்டி ரங்கநாயகி கிட்டப் போட்டு கொடுத்திருக்கும். 


     உன்னோட பாட்டி வாத்தியாரை மிரட்டி இப்படி நம்ம பிளான்ல ஒரு லாரி மண்ணை அள்ளி போட்டுடுச்சே, இனி எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்தறது?”


   “எங்க வீட்டு கிழவியை பத்தி தெரிஞ்ச விஷயம் தானே கவி, அந்த கிழவி இப்படி எல்லாம் பண்ணுமுன்னு நான் முன்னவே எதிர்பார்த்தேன், ஒரு பிளான் போனா என்ன, அது தான் அடுத்து பிளான் பி கையில ரெடியா இருக்கே, நீ இப்ப என்ன பண்ற, நான் இப்போ உனக்கு அனுப்புற வீடியோவை, அப்படியே சாருக்கு காட்டு, அப்புறம் நான் சொல்றபடி செய்யச் சொல்லு, அப்புறம் இந்த கல்யாணம் தன்னால நிக்கும்.”


    பாத்ரூமில் இருந்து வெளியே வந்தவள், தனது பேரனின் கை பிடித்தபடி ஆடிக் கொண்டிருந்த ரங்கநாயகியை பார்த்தபடியே  மனையில் சென்று அமர்ந்தாள். 


   அங்கிருந்து குழம்பிய முகத்தோடு சென்றவள்,  திரும்பி வரும்போது தெளிவாக இருப்பதைக் கண்டு ரங்கநாயகியின் மனதிற்குள் ஏனோ பூச்சி பறந்தது. இருந்தும் தன்னை மீறி எதுவும் நடந்து விடாது என்ற எண்ணத்தில், தனது பேரனோடு  கோல்டன் ஸ்பேரோவிற்கு ஸ்டெப் போட்டுக் கொண்டிருந்தவரின் கைகளில், இரும்புச் சங்கிலியை மாட்ட சிறிது நேரத்திலேயே அந்த ஊரின் காவல் துறையினர் அவர்களின் வீட்டுக்குள் நுழைந்தனர். 


    அங்கிருந்த அனைவரும் திருமணத்தை நிறுத்துவதற்காக தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று நினைக்க, ஆனால் அவர்களோ ரங்கநாயகியை கைது செய்ய பிடிவாரண்ட்டோடு வந்திருந்தவர்கள், அங்கிருப்போரின் எதிர்ப்பையும் மீறி கையோடு அவரை அழைத்துச் சென்று விட்டனர்.


Tuesday, October 28, 2025

காதல் பூ மழையே! 1

 

அத்தியாயம் 1

   கண்களுக்கு எட்டும் தூரம் வரை மனித பிணங்களின் குவியல்கள் மட்டுமே தெரிய, அங்கங்கு துப்பாக்கி ஏந்தியபடி சுற்றிக் கொண்டிருக்கும் முகமூடி ஆட்களின் கண்களில் சிக்காமல் இருக்க, பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தாள் கண்மணி. 

   தற்போது தான் முதல் வருட கல்லூரிப் படிப்பில் இருப்பவள், வட மாநிலத்திற்கு முதல் முறையாக கல்லூரி சுற்றுலா வந்திருக்க, எதிர்பாராத விதமாக அவர்கள் இருந்த இடத்திற்கு சற்று தள்ளி, திடீரென குண்டு வெடிப்பு நடந்தது. 

    அதில் மாணவர்கள் அனைவரும் திசைக்கொருவராக சிதறி போயிருந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி அவள் சம்பவ இடத்திற்கே வந்திருந்தாள். அங்கு தான் முகமூடி அணிந்த சிலர் கைகளில் துப்பாக்கியை ஏந்தியபடி, அங்கு இறந்து கிடந்தவர்களின் முகத்தை திருப்பிப் பார்த்தபடி யாரையோ தேடிக் கொண்டிருந்தனர். 

     தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் சோலையூரில், செல்வந்தரான கிருஷ்ணமூர்த்தி மற்றும் வாசுகிக்கு மகளாக பிறந்த, அந்த வீட்டின் இளவரசியான இவள், அவர்களின் உயிர் மூச்சாவாள். ஆனால் கிருஷ்ணமூர்த்தியின் தாய் ரங்கநாயகி மட்டும், அவளை அவரது உயிரை வாங்குவதற்காகவே பிறந்தவள் என்பார்.

   கிருஷ்ணமூர்த்திக்கோ தனது மகளை பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்று ஆசை, ஆனால் அவளுக்கு அது வந்தாள் தானே! எந்நேரமும் விளையாட்டுதனமாக இருக்கும் கண்மணி, தேர்வு நேரத்தில் கூட படிப்பது அரிது. 

   ஆனால் எப்படியும் ஓரளவுக்கு மதிப்பெண் பெற்று விடுவாள். ப்ளஸ் டூ முடித்து கலை அறிவியல் கல்லூரியில் அவள் சேர்வதாகக் கூற, அதற்கு ஆப்பு வைக்கும் வேலையில் இறங்கினார் ரங்கநாயகி. 

   "என்னப்பா மூர்த்தி நீ மறந்துட்டயா என்ன? நம்ம ஜோசியர் இவளுக்கு இந்த வருஷம் கல்யாணம் பண்ணியே ஆகனும்னு சொல்லல, நீங்களா பண்ணாட்டியும் அதுவா நிச்சயம் நடக்கும்னு சொன்னாரே, இப்ப எதுக்கு அவளுக்கு காலேசு படிப்பு? அவ வயசுல இருக்கும் போது, எனக்கு நீ பொறந்து நாலு வருஷம் முடிஞ்சு இருந்தது தெரியுமா?"

   அவருக்கும் அது ஒன்று தான் யோசனையாக இருந்தது, தனது மகளை நன்கு படிக்க வைத்து ஊரார் வியக்கும் படி அவளை நல்ல வேலையில் அமர்த்த வேண்டும் என்று அவருக்கு ஆசை. 

    என்ன தான் சொத்து இருந்த போதும்,  சிறுவயதிலேயே அவரது தந்தை இறந்து விட, ஒட்டுமொத்த குடும்ப பொறுப்பும் அவர் தலையில் தான். தொழிலை நடத்திய படியே தந்தை ஸ்தானத்தில் இருந்து தனது தங்கைக்கு நல்ல முறையில் திருமணம் செய்து வைத்தார்.  அடுத்தடுத்து அவருக்கு இருந்த குடும்பத் பொறுப்புக்களால் தனது படிப்பை அவரால் தொடர முடியவில்லை. 

   ஊரார் என்னதான் பணத்திற்கும் அவரது குணத்திற்கும் மதிப்பு கொடுத்து மரியாதையாக நடந்து கொண்ட போதும், அவரது வளர்ச்சி கண்டு பொறாமை கொண்ட உறவுகள் சிலர், அவரை படிக்காத தற்குறி என்றே குத்தலாக பேசுவர். அதனால் தனது பெண்ணை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் ஜோசியர் சொன்ன விஷயத்தால் கொஞ்சம் குழப்பமுற்றார். 

  ஏனெனில் அவரது தங்கைக்கு அற்ப ஆயுசு  என்று முன்பே ஜோசியர் கூறியிருக்க, அதை நம்ப மறுத்தார் கிருஷ்ணமூர்த்தி. ஆனால் ஜோசியரின் கூற்றுப்படியே பிரசவத்தின் போது அவரது தங்கை இறந்து விட, அதன் பிறகு அவரால் ஜோசியத்தை நம்பாமல் இருக்க முடியவில்லை. கண்மணியின் பூப்புனீராட்டு விழாவிற்காக தேதி குறிக்க சென்ற போது அவளது ஜாதகத்தை ரங்கநாயகி எடுத்து நீட்ட,

   "பிள்ளைக்கு 18 வயசு முழுமையா பூர்த்தியாகும் முன்னயே மாங்கல்யம் கழுத்துல ஏறிடும் ப்பா."

   "என்னய்யா சொல்லறீங்க சின்ன பிள்ளை அது, எப்படி இந்த வயசுல கல்யாணம் பண்ணி வைக்கிறது?"

   "தம்பி நீங்களா பண்ணாட்டியும் நடக்கப் போற விதியை மாத்த முடியாது இல்லையா?"

   என்றபடி அவர் விழாவிற்கு நல்ல நாள் குறித்துக் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டு வெளியே வந்த கிருஷ்ணமூர்த்திக்கு முகம் வாடி விட்டது. 

   " என்னப்பா மூர்த்தி ஜோசியர் இப்படி சொல்லிட்டாரு? அவரு சொல்லறதெல்லாம் வேற கண்டிப்பா நடக்குமே? சரி என் மக பையன் தான் எம்பேத்தியை கட்டிக்க போறான்னு ஊர் அறிஞ்ச விஷயமாச்சே, கொஞ்ச நாள் கழிச்சு நடக்கப் போற கல்யாணம் அவ பள்ளிக்கூடம் முடிச்சதும் நடக்கட்டும் சரியா? "

   மூர்த்தி அப்போது எதுவுமே பேசவில்லை, கடவுள் விட்ட வழியென்று அவர் மீது பாரத்தை போட்டு விட்டார். அதன் பிறகு ஜோசியர் சொன்னதையே மறந்து கூட போனார். 

    தற்போது தனது தாய் இதை ஞாபகப்படுத்தவும் தான், மனக் குழப்பத்தில் சுற்றிக் கொண்டு இருந்தார். ஆனால் ரங்கநாயகி தனது பேரன் சேகருக்கு அழைப்பு விடுத்து கல்யாணத்துக்கான வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்.

   சேகரோ ஒழுங்காக பள்ளி செல்லாமல்  ஊரைச் சுற்றிக் கொண்டு ஊதாரியாகத் திரிபவன். தந்தை சொத்தில் உடல் வளர்த்து வந்தவனோ, சோம்பேறி தனத்திற்கு முன் உதாரணமாக திகழ்ந்தான். அதோடு கண்மணியை விட பதிமூன்று வயது மூத்தவன், இவனது இந்த குணத்திற்க்காகவே இவனுக்கு பெண் தர யாரும் முன்வரவில்லை. 

    வாசுகிக்கு இந்த திருமணத்தில் இஷ்டம் இல்லை என்றாலும், தனது மாமியாரை எதிர்த்து பேச முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். ஆனால் கண்மணிக்கு அதெல்லாம் இல்லையே சும்மாவே தனது பாட்டிக்கு தொல்லைகளை மட்டுமே கொடுத்துக் கொண்டிருப்பவளுக்கு, இப்போது தானாக வந்து ஒரு எக்ஸ்ட்ரா லக்கேஜீம் கிடைத்தால்…அவனது இரட்டை நாடி இளைக்கும் அளவுக்கு சேகரை நன்றாக, வேலை வாங்கத் தொடங்கினாள் கண்மணி. 

   வாழைப்பழத்தை உரிப்பதற்கு கூட கூடவே சில அல்லக்கைகளை வைத்துக் கொண்டு சுற்றும் சேகரிடம் சென்று, மாங்காய் பறித்து கொடு மாமா, அந்த பொருளை எடுத்துக் கொடு மாமா, நீர் இறைத்துக் கொடு மாமா என்று அவனை விரட்டிக் கொண்டே இருந்தாள். 

    முதலில் அவளை கண்டாளே ஆசையாக ஓடி வருபவன், தற்போதெல்லாம் அவளது மாமா என்ற குரலை கேட்டாளே, பதறிக் கொண்டு ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறான். அதோடு தனது பாட்டியிடம், 

   "ஐயோ அம்மாச்சி இப்பவே இவளால நான் பாதியா இளைச்சுட்டேன், நிம்மதியா சாப்பிடக் கூட விடாம மாமா மாமான்னு ஏதாவது வேலை கொடுத்துக்கிட்டே இருக்கா, இப்பவே இப்படின்னா கல்யாணத்துக்கு அப்பறம்  ஐய்யய்யோ என்னால இவளை கட்டிக்க முடியாது ப்பா."

   அவனது தலையில் தட்டி சுற்றும் முற்றும் பார்த்தவர் சற்று தணிந்த குரலில், 

    "அடேய் இம்புட்டு வயசுக்கு மேல உனக்கு பொண்ணு தர யாருடா வரிசையில நிக்கிறா? கல்யாணம் முடியிறவரைக்கும் அவ பேச்ச கேட்டு நடக்கறது போல சும்மா நடி, கல்யாணம் மட்டும் முடியட்டும், அவ ஆட்டத்தை எல்லாம் அடக்கி மூலையில உட்கார வைக்கல, நான் ரங்கநாயகி இல்லடா."

  ரங்கநாயகி தனது மகனிடம் நைச்சியமாக பேசி, அவசர அவசரமாக நிச்சயத்தை வீட்டளவில் ஏற்பாடு செய்து விட்டார். 

    ஆனால் நிச்சியத்தன்று யாரும் எதிர்பார்க்காதபடி ரங்கநாயகியை போலீசார் கைது செய்து ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்று விட்டனர்.


பூர்ண சந்திர பிம்பம்

 





பூர்ண சந்திரபிம்பம்


Sunday, October 26, 2025

பிம்பம் 19 (இறுதி அத்தியாயம்)


 

அத்தியாயம் 19 (final)


     காரில் வந்தவர்கள்  தம்மை காப்பாற்றுவார்கள் என்று நினைத்து, அவள் கைகளை கூப்பி தன்னை காப்பாற்றுமாறு கதறி கொண்டே அழுதாள்.


     ஆனால், அதிலிருந்து இறங்கிய தாமோதரனை கண்டு இனி தான் தப்பிக்க வழியே கிடைக்காதோ என்று பதறியபடி, அக்கம் பக்கம் ஏதாவது உதவி கிடைக்குமா என்று தேட முற்பட, அவள் அங்கிருந்து தப்பிக்கும் முன்பே சிவா, தன் கையில் இருந்த துண்டாள் அவள் கழுத்தை இறுக்க தொடங்கினான்.


  ரேகா அவளது காலை பிடித்துக் கொள்ள, டாக்டர் தாமோதரனும், நாகலிங்கமும் சுற்றி முற்றி யாராவது வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டனர். சிவா அவளது கழுத்தை துண்டால் இறுக்கிக் கொண்டே சென்றான், சித்ரா தனது கைகளால் கழுத்தில் இருக்கும் துண்டினை எடுத்து விட அவனுடன் போராடிக் கொண்டிருந்தாள்.


  ஒரு கட்டத்துக்கு மேல் தனது உயிரை காப்பாற்றி கொள்ள அவளால் போராட முடியவில்லை, தனது கைகளை கொண்டு வயிற்றை கட்டிக்கொண்டவள், அந்த வானில் ஒளிரும் பூர்ண சந்திர பிம்பத்தை, விழிகளில் நிரப்பிக் கொண்டே, தனது இறுதி மூச்சினை நிறுத்தினாள்.


  கோர்ட்டில், நடந்த சம்பவங்களை அனைவரின் முன்னிலையிலும், நாகலிங்கம் ஒரு கூண்டில் நின்றுகொண்டு எடுத்துக் கூறிக் கொண்டிருக்க, அவனுக்கு எதிர் கூண்டில் சிவா நின்றிருந்தான்.


  ஆம் சிவா கைது செய்யப்பட்டிருந்தான், எம்எல்ஏ நாமினேஷனின் போதே அவன் கைக்கு காப்பு போடப்பட்டது.


    சித்ரா எவ்வாறு கொல்லப்பட்டால் என்று அவன் எடுத்து கூற கேட்டதும், அந்த கோர்ட்டில் கனத்த அமைதி நிலவியது. அங்கு சித்ராவினுடைய பெற்றோர்களுக்கு, தன் மகள் பட்ட கஷ்டங்களை கேட்டபோது, அவர்களின் கண்களில் கண்ணீர் மட்டும் நிற்காமல் வந்து கொண்டேயிருந்தது.


  அரசு தரப்பு வக்கீல் மேற்கொண்டு நடந்தவற்றை கூறுமாறு நாகலிங்கத்திடம் கூற,


  "கொஞ்ச நேரத்துலயே சித்ராவோட உயிர் போயிடுச்சு, உடனே நானும் சிவா மச்சானும் சித்ராவோட கையையும் காலையும் புடிச்சு,  கொல்லை புறம் இருக்க கதவு வழியா வீட்டுக்குள்ள கொண்டு போனோம். அங்க பெட்ரூமில் இருந்த சீலிங் ஃபேன்ல அவளோட சேலையில தூக்கு மாட்டி, சித்ராவோட உடலை தொங்க விட்டோம். அவ காலுக்கு கீழயே ஒரு ஸ்டூலை கவுந்த மாதிரி போட்டு, இதை ஒரு தற்கொலை மாதிரி ரூமை செட் பண்ணினோம், அப்புறம் பின்னாடி கொல்லப்புற  கதவு வழியா வெளிய வந்து, அதை சாத்தி கம்பியை  உள்ள விட்டு தாழ் போட்டுட்டு, நாங்க எல்லாரும் திரும்பவும் கோயிலுக்கே கிளம்பிட்டோம்.


  கொஞ்ச நேரத்துல கோயிலில் பூஜை முடிஞ்சு, சிவா மச்சானை தவிர மத்த எல்லாரும் திரும்ப வீட்டுக்கு வந்தோம். அப்ப முன்பக்க கதவு சாத்தி இருந்ததை பார்த்து, சாந்தி அத்தை கதவை  தட்டி பார்த்து, சித்ராவை ரொம்ப நேரமா கத்தி கூப்பிட்டாங்க, ஆனா அவகிட்ட இருந்து எந்த விதமான பதிலும் வரலன்னு அவங்களுக்கு பயம் அதிகமாயிடுச்சு, உடனே அக்கம் பக்கத்துல இருக்குறவங்களை சத்தம் போட்டு கூப்பிட்டாங்க. நானும் அவங்களோட சேர்ந்து கதவை உடைக்கிறதுக்கு ட்ரை பண்ணினேன். ஒரு கட்டத்துல எல்லாரும் சேர்ந்து வேகமா தள்ளவும் கதவு திறந்துடுச்சு,  அவசரமா சாந்தி அத்தை சித்ராவை தேடி அவ பெட்ரூமுக்கு போய் பார்த்தாங்க.


    அங்க அவ தூக்குல தொங்குறதை பார்த்து, அதிர்ச்சியில் அத்தை கத்தி அழ ஆரம்பிச்சு எல்லாரையும் கூப்பிட்டாங்க. நான் தான் போலீசுக்கும் ஆம்புலன்ஸ்க்கும் இன்பார்ம் பண்ணினேன். கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல டாக்டர் தாமோதரன் இருந்ததால எங்களுக்கு வசதியா போயிடுச்சு, ஒரு வழியா சித்ராவோட கொலையை அவர் மூலமா  தற்கொலையா மாத்திட்டோம்.


    சித்ரா ஏற்கனவே ஊர்காரங்க முன்னாடி ரெண்டு மூணு தடவை தற்கொலை செஞ்சுக்க முயற்சி செஞ்சதால,  அவளோட இறப்பு தற்கொலையாத்  தான் இருக்கும்னு எல்லாரும் நம்புனாங்க, அவ உடம்புல மருந்து செலுத்தி அப்படி நடந்துக்க வச்சதே நாங்க தான்னு யாருக்கும் தெரியாது, அதனால யாருக்கும் எங்க மேல எந்த சந்தேகமும் வரல, சிவா மச்சான் வந்ததும் அவரும் திறமையா நடிக்க ஆரம்பிச்சாரு.



      சித்ராவோட அப்பா அம்மாவுக்கும் நான் தான் போன் பண்ணி சொன்னேன், அவங்க ஏதோ குலதெய்வம் கோயிலுக்கு போயிட்டு சித்ராவை பார்க்கத்தான் ஊருக்கு வந்துட்டு இருந்தாங்க,நான் போன் செஞ்ச கொஞ்ச நேரத்திலேயே அவங்களும் வீட்டுக்கு வந்துட்டாங்க. அவங்க  சிவா மச்சான் கதறி அழுததை பாத்துட்டு சித்ராவுடைது தற்கொலை தான்னு முடிவே பண்ணிட்டாங்க. ஒரு வழியா சிவா மச்சானும் சித்ராவோட அப்பா அம்மா மனசுல, சிம்பதியை கிரியேட் பண்ணிட்டான். அது மூலமா தான் இந்த வருஷம் நடக்க போற எம்எல்ஏ எலக்சனுக்கு, இந்த ஊர் சார்பாக எம்எல்ஏ போஸ்டிங்க்கு கட்சி மேல் இடத்துல சிவா மச்சானுக்காக சித்ராவோட அப்பா ரெக்கமண்ட் பண்ணாரு."


  நாகலிங்கத்தின் வாக்குமூலத்தை கேட்டுக்கொண்ட நீதிபதி, அவரது தீர்ப்பினை எழுத ஆரம்பித்தார்.


  ஜெயிலில் இருக்கும் நாகலிங்கத்தை கொலை செய்ய யாரேனும் வரக்கூடும் என்று விக்ரம் முன்னமே யூகித்தான். அவன் கூறியது போலவே ஒருவன் நாகலிங்கத்தை கொலை செய்ய ஜெயிலுக்குள் முயற்சி செய்தது உண்மைதான், ஆனால் போலீசார் அவனை மடக்கி பிடித்து விட்டனர்.


    உண்மையான குற்றவாளி வெளியில் வரவேண்டும் என்றால்,  உண்மையை மறைத்து சில நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டும் என்று விக்ரம் கூறியதை கமிஷனரும் ஒத்துக் கொண்டார். அதனால் அவர்கள் நாகலிங்கமும் அவனை கொள்ள வந்தவனும் இறந்து விட்டதாக பொய்யான செய்தியை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தினர்.


      அவர்கள் நினைத்தது போலவே சிவா தைரியமாக வெளியே வந்தான். அப்படி அவன் வெளிவந்து எம் ஆர் குரூப்பிற்கு தொலைபேசியில் அழைத்ததன் காரணமாகத்தான் இங்கு மாட்டிக் கொண்டான், அன்று விக்ரமும் ஜனாவும் சென்றிருந்த ஆராய்ச்சி கூடத்தில் இருந்து, இன்னொரு தனி வழி மெடிக்கல் ஷாப்பை நோக்கி சென்றது அதுவே அவர்களின் சந்தேகத்திற்கு வழி வகுத்தது. பிறகு நாகலிங்கத்திற்கு போலீசார் கொடுத்த டிரீட்மென்டின் காரணமாக, அவன் மற்ற உண்மைகளையும் மடமடவென்று கொட்டி விட்டான்.


  சித்ராவின் டைரியில் கிடைத்த இமெயில் மூலம், விக்ரம்  அவளது இமெயிலுக்கு சென்று பார்த்தபோது, அவளுக்கு யாரும் இமெயில் செய்தது போலவும் தெரியவில்லை, அவளது இமெயிலுக்கு எந்த ஒரு புதிய செய்தி வந்ததாகவும் தெரியவில்லை. அதனால் அதை விக்ரம் சாதாரணமாக விட்டு விட்டான். 


  ஆனால் நாகலிங்கத்திடம் இருந்து கிடைத்த செய்திக்கு பிறகு, அவன் மறுபடியும் அந்த இமெயில்களை ஓபன் செய்து, அதில் வேறு ஏதாவது இருக்கின்றதா என்று தேட, அங்கு டிராப்டில் சேமிக்கப்பட்டிருந்த கோப்புகளை கண்டான். உடனே அதனை திறந்து பார்த்தபோது அதில் ஆராய்ச்சி செய்யப்படும் மருந்துகளின் விபரங்களும், அதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களும் அதில் இருந்தது. அதன் மூலம் இதற்குக் காரணமான முக்கிய குற்றவாளியையும் கண்டுபிடித்து விட்டான். 


    அந்த இமெயிலில் இருந்த அட்ரஸின் மூலம் மும்பையில் இருக்கும் எம் ஆர் குரூப் பற்றிய விபரங்களையும் சேகரித்து, போலீசாருக்கு அளித்து விட்டான். அதை ஆதாரமாகக் கொண்டு, அவர்களை கைது செய்ய ஒரு தனிப்படை மும்பையை நோக்கி விரைந்தது.


  ஆனால் அவர்கள் அங்கு சென்று சேர்வதற்கு முன்பே, அந்த கம்பெனியில் ஏற்பட்ட மின்கசிவால், அந்த கட்டிடம் தீப்பற்றி எரிந்தது. அதன் உள்ளே இருந்த அத்தனை பேரும் எரிந்து சாம்பல் ஆயினர்.


  போலீஸ் தரப்பில் இருந்து சித்ராவின் இமெயிலில் இருந்து எடுக்கப்பட்ட அத்தனை டேட்டாக்களும், மற்றும் மார்ச்சுவரியில் கிடைத்த ஹார்ட்டிஸ்கில் இருந்து, கிடைத்த அத்தனை டேட்டாக்களும் ஆதாரங்களாக நீதிபதியிடம் கோட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.


  அவற்றை சரி பார்த்த நீதிபதி, தமது தீர்ப்பினை கூறத் தொடங்கினார். நாகலிங்கத்துக்கு ஆயுள் தண்டனையையும், அவனை கொல்ல வந்த சுதாகர் என்ற சிவாவின் கையாளுக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனையையும், சிவாவிற்கு தேச துரோக குற்றத்திற்காக  இரட்டை ஆயுள் தண்டனையையும் தீர்ப்பளித்தார். 


    இந்த கேசில் சாட்சிகளையும் ஆதாரங்களையும் சேகரிக்க உறுதுணையாக இருந்த டிடெக்டிவ் விக்ரமுக்கு தமது பாராட்டை தெரிவித்துக் கொள்வதாக நீதிபதி கூறினார்.   


  மும்பையில் இருந்த எம் ஆர் குரூப்ஸ் எரிந்து நாசமானதால் இந்த ஆய்வுகளைப் பற்றிய விரிவான விவரம் எதுவும் தெரியவில்லை. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகள், பிற மாநிலங்களிலும் பரவி இருக்க வாய்ப்புள்ளது, அதனால் இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்குமாறு பரிந்துரைத்தார். அத்தோடு பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சையை ஆரம்பிக்குமாறும் உத்தரவிட்டார்.


  தமிழ்நாட்டில் சித்ராவின் வழக்கு தான் பிரேக்கிங் நியூஸாக அனைத்து செய்தித்தாள்களிலும், டிவி சேனல்களிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.


    விக்ரமும் ஜனாவும் தமது உடைமைகளை ஊருக்கு செல்வதற்காக எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சித்ராவின் குடும்பத்தார் கண்ணீர் மல்க அவருக்கு நன்றிகள் பல கூறினர். சித்ராவின் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி விக்ரமை கட்டிக் கொண்டு நன்றி கூறினார்.


  "இதெல்லாம் எங்களோட கடமை தானே சார், சொல்லப் போனா நாங்க தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்,  நீங்க மட்டும் உங்க தங்கையோட கேஸை மறுபடியும் ஓபன் செய்யணும்னு சொல்லாம இருந்திருந்தா, இவ்வளவு பெரிய தேச துரோகத்தை எங்களால் கண்டுபிடித்து இருக்கவே முடியாது. அத்தனை பேரோட உயிரை காப்பாற்றிய பெருமை உங்களுக்கு தான் சேரும்  சார்."


    அப்போது மெய்காரன் பட்டியை சேர்ந்த ஊர் பொதுமக்களும் ஊர் தலைவரோடு சேர்ந்து அவர்களுக்கு நன்றியுரைக்க, அவர்கள் வீடு தேடி வந்திருந்தனர்.


    "அதெல்லாம் எதுவும் வேண்டாம் சார் இங்க இருக்கிற மக்களோட ஒத்துழைப்பு இல்லைன்னா எங்களால கண்டிப்பா இதையெல்லாம் கண்டுபிடித்திருக்க முடியாது. உங்க உதவிக்கு நாங்க தான் ரொம்ப நன்றி சொல்லணும்.


    ஊர் தலைவரே  புதுசா இந்த ஊருக்கு வந்த எங்களுக்கு, இருக்க இடமும் கொடுத்து, சாப்பாடு செஞ்சு போட ஒரு துணையையும் அனுப்பி வைச்சீங்க, அதனால தான் எங்களால எங்க வேலையே தெளிவா செய்ய முடிஞ்சுது இல்லாட்டி நாங்களும் தவிச்சு தான் போயிருப்போம்."


    "என்ன சொல்றீங்க தம்பி? நான் யாரையும் அப்படி அனுப்பி வைக்கலையே?  ஊர் திருவிழா பிசில நீங்க வந்த விஷயத்தை நான் மறந்தே போயிட்டேன். ஆமா யார் உங்க வீட்ல வந்து வேலை செஞ்சது?"


    அப்போது ஜனா அன்றைய செய்தித்தாளை தூக்கிக் கொண்டு, அவசரமாக விக்ரமை நோக்கி ஓடி வந்தான், ஓடிவந்த வேகத்தில் கையில் உள்ள பேப்பர் தவறி கீழே விழுக, அதை எடுத்த சித்ராவின் அண்ணன் விக்ரமை நோக்கி பேசத் தொடங்கினார்.


      "பாருங்க சார் இந்த அப்பாவி முகத்தை கொல்ல அவனுக்கு எப்படி தான் மனசு வந்தது.  அந்த படுபாவியால என் தங்கச்சி எப்படி எல்லாம் கஷ்டப்பட்டாளோ, தன் கருவை சுமந்து நிக்கறவன்னு கூட நினைக்காம, கழுத்தை நெரிச்சு கொன்னுட்டானே அந்த  பாவி, என் தேவிம்மா அப்ப என்னவெல்லாம்  கஷ்டப்பட்டாளோ, எப்படி எல்லாம் வலியால துடிச்சாளோ?"


செய்தித்தாளில் இருந்த போட்டோவை பார்த்து விட்டு அதிர்ந்து போய் நின்ற விக்ரம்,


  " சார் தேவி??... உங்க தங்கச்சி பேரு சித்ரா தானே?"


    "அவ பேரு சித்ராதேவி, எங்க குடும்பத்துக்கே அவதான் சார் குலசாமி மாதிரி, ஏன்னா எங்க வம்சத்துல பிறந்த முதல் பெண் குழந்தை அவதான். அதனால வீட்ல எல்லாருமே அவள தேவிம்மான்னு தான் கூப்பிடுவோம்."


அந்த போட்டோவில் அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள் விக்ரமுக்கும் ஜனாவிற்கும் தேவி என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட சித்ராதேவி.


ஆறு மாதங்களுக்குப் பிறகு


  விக்ரமை தேடி ஏதோ கேஸ் விஷயமாக வந்திருந்தார் மெய்க்காரன்பட்டியை சேர்ந்த இன்ஸ்பெக்டர்.


    அவருடைய கேசை பற்றி விரிவாக கூறிவிட்டு கிளம்ப எத்தனிக்கும் போது, விக்ரம் அவரிடம் நாகலிங்கத்தை பற்றியும் சிவாவை பற்றியும் கேட்டான்.


    "சார் உங்களுக்கு விஷயமே தெரியாதா??.. அவங்க ஜெயிலுக்கு போன  ஒரு மாசத்திலேயே, அந்த நாகலிங்கம் பைத்தியம் புடிச்சவன்  மாதிரி, தன்னைத்தானே துன்புறுத்திக்க ஆரம்பிச்சான். எப்ப பார்த்தாலும் செவுத்துல இருக்க ஒரு இடத்தை பார்த்து கத்திக்கிட்டே இருப்பான், இதுவே  தொடர்ந்து நடந்திக்கிட்டு இருந்ததால, அவனை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டோம். 


     ஆனா அங்க போன ஒரு வாரத்திலேயே அவன் தூக்குல தொங்கிட்டான் சார்."


  "அப்போ சிவா?"


    "அவனுக்கு என்ன ஆச்சுன்னே தெரியல சார். எப்ப பாரு, மேல பாத்து பயந்துகிட்டே உட்கார்ந்து இருப்பான், சாப்பிடுன்னு சொன்னாலும் சாப்பிட மாட்டான், ரெண்டு மூணு தடவை தற்கொலை பண்ணிக்க கூட முயற்சி பண்ணி இருக்கான்.


     ஆனா அதிர்ஷ்டவசமா ஒவ்வொரு தடவையும் தப்பிச்சுக்கிட்டே இருக்கான். ஒரு பொட்டு கூட தூங்குறது இல்லை, மயக்க ஊசியை கூட செலுத்தி பார்த்துட்டோம், அப்படியும் அவனையும் மீறி எந்திரிச்ச அலறிகிட்டே ஓடறானே ஒழிய, அவன் நிம்மதியா தூங்கி நாங்க பார்த்ததே இல்லை. இப்ப அவனையும் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில தான் சேர்த்திருக்கோம். 


     டிரீட்மென்ட் போயிட்டு இருக்கு, பார்ப்போம் அவன் வாயில இருந்து ஏதாவது உண்மைய சொன்னா தான், இந்த ஆராய்ச்சி செய்தவர்களை பத்தியும் எந்த நாட்டுக்காரங்க இதை செஞ்சிட்டு இருக்காங்கன்ற உண்மையும் வெளியே வரும்."


  கோர்ட் இந்த கேசை சிபிஐக்கு மாத்தி  விட்ட காரணத்தால், அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று விக்ரம் மற்ற வேலைகளை கவனிக்க தொடங்கி விட்டான். இப்போது இன்ஸ்பெக்டர் கூறிய செய்தியை கேட்டு, அடுத்த நொடியே ஜனாவை அழைத்து இந்த ஆராய்ச்சியை பற்றிய விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று கூறினான்.


  இவர்கள் அந்த ஆராய்ச்சியை பற்றிய உண்மைகளை கண்டுபிடிப்பார்களா? எந்த நாட்டில் இருந்து மருந்துகள் அனுப்பப்படுகின்றது என்பதையும், இந்த ஆராய்ச்சிகளை செய்பவனை பற்றிய உண்மைகளையும் கண்டுபிடிப்பார்களா? பார்க்கலாம் முடிந்தால் அடுத்த பாகத்தில் ....


                        என்றும் அன்புடன்,


                    சரண்யா சதீஷ்குமார்.



Thursday, October 23, 2025

பிம்பம் 18


 

அத்தியாயம் 18


      சிவாவிற்கு சித்ராவின் திட்டங்களை பற்றி தெரிந்திருந்தாலும், தனக்கு தெரிந்து கொண்டதைப் போல, அவன் சித்ராவிடும் காட்டிக்கொள்ளவில்லை. சாந்தியுடன் கோயிலுக்கு சென்று விட்டு சிறிது நேரத்திலேயே அங்கிருந்து யாரும் அறியாமல் கிளம்பி விட்டான். வந்தவன் கொல்லை புறத்தில் ரேகாவோடு சேர்ந்து சித்ராவின் வரவுக்காக காத்திருந்தான், இதோ அவளும் வந்துவிட்டாள்.


    சித்ரா இவர்கள் இருவரையும் கண்டு அதிர்ந்து போய் நின்று விட்டால், அவர்கள் அவளை நோக்கி முன்னேறி வருவதை கண்டு, உடனே திரும்பி வீட்டிற்குள் செல்ல முயன்றாள், ஆனால் அவளை பார்த்து சிரித்த படி,  நாகலிங்கம் பாதையை மறைத்து கொண்டு நின்றிருந்தான்.


  அவளது மூளை, தான் வசமாக மாட்டி கொண்டதாக  எச்சரிக்கை செய்தி அனுப்பியது, இதிலிருந்து எவ்வாறு தப்பிப்பது என்று அவள் யோசிக்க தொடங்கிய போது, ரேகா அவளது கைப் பையினை பிடுங்கி, அவளது போனை எடுத்து, அதிலிருந்து யார் யாருக்கு அவள் அழைப்பு விடுத்துள்ளால் என்று சோதிக்க தொடங்கினாள்.


  "மாமா, அவளோட அப்பா அம்மாக்கு தான் கூப்பிட்டு இருக்கா, ஆனா அவங்க போனை எடுக்கல போல.......ஜுரோ டைமிங்ன்னுதா காட்டுது, அப்படின்னா அவங்க சிக்னல் இல்லாத இடத்துல இருக்காங்கன்னு நினைக்கிறேன்.. என்ன சித்ரா குடும்ப பொண்ணு, இப்படி அர்த்த ராத்திரியில, யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு ஓடிப் போக நினைக்கலாமா????. அப்புறம் குடும்ப கவுரவம் என்ன ஆகிறது????"


  "ச்சீ... கௌரவத்தை பத்தி நீ பேசறியா?  அடுத்தவ புருஷனோட குடும்பம் நடத்துற, நீ எல்லாம் அதை பத்தி பேசாதே,...... நீ என்கிட்ட பழகுனதே என் பணத்துக்காக தான். உன் அண்ணனை என்னோட சேர்த்து வச்சிடனும்னு நினைச்சே?... அது முடியல, அதுனால நீ காதலிச்சவனுக்கே, என்னை மனைவியா ஆக்கிட்ட, இப்போ  ரெண்டாந்தாரமா அவருக்கு வாக்கப்பட ரெடி ஆகிட்ட, உனக்கு வெக்கமா இல்ல?"


      பலமாக சிரிக்க தொடங்கிய ரேகா,


    " பரவாயில்லையே எல்லாமே தெரிஞ்சு வச்சிருக்க,....அதோட இதையும் தெரிஞ்சிக்கோ,.... நான் நம்பர் டூ கிடையாது, நீ தான் என் புருஷனை காதலிச்சு கல்யாணம் பண்ணி இருக்கே, புரியலையா?.... என் மாமா கூட, அவர் பொண்டாட்டியா, நான் வாழ தொடங்கி பல வருஷம் ஆச்சு, நீயா தான் வாலன்டியரா வந்த, இப்போ எங்களை குத்தம் சொன்னா? இது உனக்கே நல்லா  இருக்காம்மா???"


  அவளிடம் இருந்த பையை பிடுங்கிக் கொண்டு முன்னேற நினைத்த சித்ராவை, கைநீட்டி தடுத்த சிவா அவளிடம் பேச தொடங்கினான்.


  "எங்க மேடம் யார்கிட்டயும் சொல்லாம சைலண்டா கிளம்புறீங்க?.... வீட்டை விட்டு போறதா ஐடியாவா?...... இல்ல...... இந்த ஊரை விட்டே எஸ்கேப் ஆகி போறதா பிளான்னா?...."


    "எனக்கு இங்க இருக்க பிடிக்கல, அதனால வீட்டை விட்டு போறேன்?"


      "ஏன்?......பதில் சொல்லாம இந்த இடத்தை விட்டு நீ நகர முடியாது."


      "ஏன்னா, என் புருஷன் எனக்கு மட்டும் தான் புருஷனா இருக்காருன்னு  நினைச்சுட்டு இருந்தேன், இப்பதான் தெரியுது, அவன் பணத்துக்காக தான் என்னை கல்யாணமே பண்ணி இருக்கான்னு,.... அதோட, ஏமாத்தி என்னை கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே, இன்னொருத்தி கூட புருஷனா வாழ்ந்துகிட்டு இருந்திருக்கான், என்னை  கல்யாணம் செஞ்சதுக்கு அப்பறமும் கூட,  இப்போவரைக்கும் அவ கூடத்தான் தொடர்புல  இருக்கான். இந்த பதில் போதுமா? இல்ல இன்னும் வேற ஏதாவது சொல்லனுமா?"


  "அதை நீ வெளிப்படையாவே காலைல எல்லாரும் முன்னாடியும் சொல்லிட்டு கிளம்பலாமே?"


  "சொல்லலாம்தான் அவன் ஒரு துரோகியா மட்டும் இருந்தா, ஊரை கூட்டி சட்டையை புடிச்சு கேள்வி கேட்டு சண்டை போட்டு இருப்பேன். ஆனா,...... அவன் ஒரு கொலைகார கூட்டத்திற்கே தலைவனா இல்ல இருக்கான்???.."


  "ரேகா நான் சொல்லல அவளுக்கு ஏதோ விஷயம் தெரிஞ்சிருக்கு, அது தான் இங்க இருந்து ஓட நினைக்கிறான்னு."


  சிவா அவளை நோக்கி முன்னேறி வந்தான், சித்ரா அவனிடமிருந்து விலகிப் போக, அவள் வலது கையை முதுகுபுறமாக திருப்பி பிடித்தான், திடீரென்று அவளது கைகளை திருப்பியதால், நரம்பு இழுத்துக் கொள்ள சித்ரா வலியில் துடித்தால்.


  "உன் கூட இவ்வளவு நாளா வாழ்ந்த எனக்கு, உன்னை பத்தி தெரியாதா? சொல்லு என்ன பிளான் உன்னோடது? முதல்ல உனக்கு எப்படி இந்த விஷயம் எல்லாம் தெரிஞ்சது, சொல்லப் போறியா? இல்லையா?"


    ஆசை வார்த்தை பேசியவன் இன்று அவளை அதட்டி கொண்டிருந்தான், உன் மீது பூப்பட்டாலே எனக்கு நோகுமடி என்று காதல் மொழி பேசியவன், இன்று அவளது கைகளை முறுக்கியதால் ஏற்பட்ட வலியில், கண்களில் நீர் வந்த போதும், அதைப் பற்றி கவலையே இல்லாமல் அவளை மிரட்டி கொண்டிருந்தான்.


  "ரேகா அவளோட பர்ஸ்ல ஏதாவது டாக்குமெண்ட்ஸ் இருக்கான்னு பாரு?"


  "இதுல கொஞ்சம் பணமும், அவளோட போனும் மட்டும் தான் மாமா இருக்கு, வேற எதுவுமே இல்ல....... சித்ரா, ஒழுங்கா அவர் கேக்குறதுக்கு பதிலை சொல்லு, இல்ல,....... இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு பொறக்க வேண்டிய உன் பிள்ளை, இப்பவே பிறந்திடும்..... எப்படி வசதி?"


  தனது குழந்தையின் உயிரை காப்பாற்றிக் கொள்ள பயந்து கொண்டு, உண்மையை கூறி விட்டால், பாதிக்கப்பட்டிருக்கும் அத்தனை உயிர்களையும் காப்பாற்ற முடியாது. அதனால் எக்காரணம் கொண்டும், தனது இமெயிலில் சேமித்த விபரங்களை பற்றி, தன் உயிரே போனாலும் கூறக்கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டால் சித்ரா, இருந்தும் இவர்களை திசை திருப்ப பேச தொடங்கினாள்.


  " நேத்து மதியம் ரேகாவை தேடி அவ வீட்டுக்கு வந்தப்பதான், நீங்க அவ கூட பேசிக்கிட்டு இருக்கறதை கேட்டேன், ஒருவேளை நான் இங்க இருந்தா, குழந்தைக்கு ஏதாவது ஆபத்து வந்திடுமோன்னு பயந்து தான் ஊருக்கு போகலான்னு முடிவு செஞ்சேன், இது தவிர என்கிட்ட எந்த பிளானும் கிடையாது என்னை நம்புங்க."


  "மச்சான் இதுக்கு மேலயும் இவளை உயிரோட விட்டு வைக்கணுமா??.


     என்ன மாமா பேசாம நிக்கிற?.... என்ன மாமா, பொண்டாட்டி  பாசம் தடுக்குதா?.... இல்ல,.....அவ வயித்துல இருக்க புள்ள பாசம் தடுக்குதா???... என் வயித்துல  உண்டான உன் பிள்ளைகளையெல்லாம், எத்தனை தடவை கலைச்சிருப்பே????.  அப்போ இல்லாத பாசமா, இப்போ வந்துட போகுது????"


      நிலைமை கைமீறி போவதை உணர்ந்த சித்ரா, அவர்கள் பேசிக் கொண்டிருந்த நேரத்தை பயன்படுத்தி, தன் பலத்தை ஒன்று திரட்டி சிவாவை தள்ளி விட்டுவிட்டு, அங்கிருந்து ஓட தொடங்கினாள். அந்த வீட்டை விட்டு தாண்டுவதற்கு முன்பே ஒரு கார் வந்து அவளது வழியினை அடைப்பது போல்  நிற்க, திடீரென்று வந்த வண்டியால், சித்ரா தடுமாறி கீழே விழுந்தாள்.

  


Saturday, October 18, 2025

பிம்பம் 17


 

அத்தியாயம் 17


    சித்ரா ஏதோ தைரியத்தில் டிராவல்ஸில் டிக்கெட் புக் செய்து விட்டாலும், இந்த கொலைகார கும்பலை மீறி எப்படி ஊரை விட்டு வெளியே செல்வது என்று யோசிக்க தொடங்கினால்,... எப்படியும் ஊரில் அனைவரும் சித்ரா பௌர்ணமி அன்று கோயிலில் இருப்பார்கள், அந்த சமயத்தில் குறுக்குப் பாதையில் நடந்து சென்றால், மெயின் ரோட்டில் வரும் ஏதாவது ஒரு வாகனத்தில் லிப்ட் கேட்டாவது, பக்கத்து ஊரை அடைந்து விடலாம் என்று நினைத்தால்.

    உடைமைகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டால், எதிரில் யாரேனும் பார்த்தால் மாட்டிக் கொள்வோம், அதனால் பயணத்துக்கு தேவையான பணத்தையும், தனது மருத்துவ குறிப்புகள் கொண்ட பைல்லை, மொபைலில் போட்டோவாகவும் எடுத்துக் கொண்டாள். எதற்கும் மீண்டும் தனது தந்தைக்கு அழைத்துப் பார்க்கலாம் என்று அவரது போனுக்கு தொடர்பு கொண்டாள், ஆனால் இப்போதும் அதேபோல் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக கூற, நாளைய இரவுக்காக காத்திருக்கத் தொடங்கினாள்.

  சிவா இரவு வீட்டுக்கு வருவதற்கு முன்பே இவள் சாப்பிட்டு விட்டு படுத்துக் கொண்டால், அடுத்த நாள் காலை வெகு நேரம் ஆகியும் அவள் எழாமல் இருக்க, அவன் உடும்புக்கு என்ன ஆயிற்று என்று விசாரித்த போது,  சோம்பலாக இருப்பதாகவும், தூக்கம் வருவதாக கூறி படுத்துக்கொண்டாள். சிவாவும் அவனது அம்மாவிடம் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டு கோயிலுக்கு சென்று விட்டான். 

  அன்று மாலை அனைவரும் கோயிலுக்கு கிளம்பி கொண்டிருந்தனர். சித்ரா தனக்கு உடல்நிலை சரியில்லை அதனால் தான் வீட்டிலேயே ஓய்வெடுப்பதாகவும், மற்ற அனைவரும் கோவிலுக்கு சென்று வருமாறு கூறினாள், ஆனால் சிவா தான் உடன் இருப்பதாக கூற, அவள் வேண்டாம் நான் ஓய்வெடுத்தால் சரியாகி விடுவேன், என்று கூறி அவனையும் சாந்தியுடன் கோவிலுக்கு அனுப்பி வைத்தாள். 

பிறகு அவள், அவர்கள் சென்று விட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு, அவசரமாக தனது ஹேண்ட் பேக்கில் பணத்தையும் மறக்காமல் அவளது ஃபோனையும் எடுத்துக்கொண்டு முன் வாசல் கதவை தாள் போட்டுவிட்டு, அவர்கள் பெட் ரூமின் பின்புறம் இருக்கும் கொல்லைபுறம் வழியாக, கதவைத் திறந்து வெளியே வந்தவள், அப்படியே அதிர்ந்து நின்று விட்டால்.

     ஏனென்றால் அங்கு கொல்லைப்புறத்தில், அவளது வருகைக்காக அவனது கணவன் சிவப்பிரகாசும், ரேகாவும் காத்துக் கொண்டிருந்தனர்.

  அவள் போன் செய்து டிக்கெட் புக் செய்த டிராவல்சில் தான், டாக்டர் தாமோதரன் என்றுமே, மும்பையில் இருந்து மெடிசன்களை வர வைத்து, தனது காரில் அதை ஏற்றுக் கொண்டு, மார்ச்சுவரி வழியாக ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தான். அன்றும் அதே போல டிராவல்ஸுக்கு வந்திருந்தான்.

    "என்னப்பா ராஜ்?...... எப்படி இருக்க? ட்ராவல்ஸ் எல்லாம் எப்படி  ஓடுது?"

  "அடடே வாங்க டாக்டர் சார், கொரோனா வந்ததால ஊரடங்கு வேற அமல் படுத்திட்டாங்க, எப்பவாவது தான் ஒன்னு ரெண்டு டிக்கெட் வருது, அதுலயும் ஏதாவது கொரோனா பேசன்ட் வந்துருவாங்களோன்னு மனசுக்குள்ள திக்கு திக்குன்னு இருக்குது. நீங்க தான் எனக்கு ரெகுலர் கஸ்டமராயிருந்து, இந்த கொரோனா டைம்லையும், என்னை வாழ வைக்கிறீங்க.... இப்ப கூட பாருங்க,  மெய்காரன் பட்டியிலிருந்து ஒரு பொண்ணு போன் பண்ணி டிக்கெட் புக் பண்ண சொல்லுச்சு, அந்த பொண்ணுக்கு டிக்கெட் புக் பண்ணலாமா வேண்டாமான்னு எனக்கு அவ்வளவு சந்தேகம்?.... அப்புறம் அந்தப் பொண்ணு பிரக்னண்டா இருக்கிறேன்னு சொன்னதால, மனசு கேட்காம நானும்  நாளைக்கு நைட் 8 மணி பஸ்கான டிக்கெட்டை புக் பண்ணிட்டேன்."

      "மெய்க்காரன்பட்டியா?..... அங்க சித்ரா பௌர்ணமி திருவிழா ஆச்சே?....கம்பம்  போட்டதும் அங்கிருந்து யாரும் ஊரை விட்டு வெளியே போக மாட்டாங்களே?..."

    "ஆமா சார் அந்த பொண்ணு பிரக்னண்டா இருக்குதாம், அவங்க அப்பா அம்மாவை பார்க்க போகணும்னு சொல்லி டிக்கெட் புக் பண்ணுச்சு, எனக்கு டவுட்டாதான் இருந்தது, ஆனா அந்த பொண்ணு தன்னுடைய ரிப்போர்ட்ஸ் எல்லாத்தையும் எனக்கு மொபைல்ல மெசேஜா அனுப்புனதுக்கு அப்புறம் தான், மனசு கேட்காம டிக்கெட்டை புக் பண்றேன்னு சொல்லிட்டேன். நாளைக்கு இங்க வரும்போது காசு கொடுத்தா போதும்னு சொல்லிட்டேன். ஆனாலும் மெய்காரன் பட்டியில் அதிகமா கொரோனா சாவு வேற விழுந்துட்டு இருக்கு!.... ஒரு பயம் இருக்கதான் செய்யுது டாக்டர் சார்."

  டாக்டர் தாமோதரனுக்கு ஏனோ  சந்தேகம் துளிர் விட்டது.

    "எது ப்ரக்னண்டா இருக்குற பொண்ணா?.... எத்தனை பேருக்கு டிக்கெட் புக் பண்ண சொல்லி இருக்கு?."

   "அந்தப் பொண்ணுக்கு மட்டும் தாங்க டிக்கெட் புக் பண்ணுச்சு."

  "ஏம்பா பிரக்னண்டா இருக்க பொண்ணை யாராவது தனியா அனுப்புவாங்களா?..... ஒரு வேலை அந்த பொண்ணு பொய் சொல்லிட்டு, கொரோனாவோட உன் பஸ்ல ஏறி வெளியூர் போற ஆளா இருந்தா?....  அப்பறம் அரசாங்கத்தில் இருந்து வந்து, உன்னால தான் ஊருக்குள்ள எல்லாருக்கும் கொரோனா பரவுச்சின்னு, உன் டிராவல் ஆபீசையே  இழுத்து மூடி சீல் வெச்சிருவாங்க...."

  "அய்யய்யோ என்ன டாக்டர் சொல்றீங்க????...."

  "ஆமாப்பா இப்ப எல்லாம் கொரோனா டைம்ல, ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு போகணும்னா நெகட்டிவ் சர்டிபிகேட்  காமிக்கணும் தெரியுமில்ல????...

அந்த பொண்ணு ஏதோ ரிப்போர்ட் காமிச்சுதுன்னு சொன்ன இல்ல,...

அதை காட்டு, அதுல அந்த சர்டிபிகேட் ஏதாவது இருக்கான்னு பார்ப்போம்."

    "இதோ இதுதான் அந்த பொண்ணு அனுப்புன சர்டிபிகேட்ஸ் டாக்டர்."

    டாக்டர் தாமோதரனுடைய சந்தேகம் ஊர்ஜிதம் ஆகிவிட்டது.

"சரிப்பா இந்த பொண்ணு பிரக்னண்டா இருந்திருந்தா எப்படியும் அரசாங்கத்துல பதிவு செஞ்சிருக்கும்,  நான் ஹாஸ்பிடல் போய் செக் பண்ணிட்டு சொல்றேன், அப்புறமா அந்த பொண்ணை பஸ்ல ஏத்திக்கோ சரியா?..."

    "ரொம்ப நன்றி டாக்டர், நல்ல வேளை என்னை காப்பாத்துனீங்க. நீங்க போன் பண்ணி உறுதி செஞ்சதற்கு அப்புறமா, அந்த பொண்ணை பஸ்ல ஏத்திக்கிறேன்."

  டிராவல்ஸிலிருந்து காருக்கு வந்ததும், முதல் வேலையாக நாகலிங்கத்திற்கு போன் செய்து, அவன் மூலம் சிவாவிற்கு விஷயத்தை தெரியப்படுத்தினான் டாக்டர் தாமோதரன். விஷயம் கேள்விப்பட்ட நாகலிங்கம் இதை ரேகாவிடமும் பகிர்ந்து கொண்டான்.

  வீட்டிற்கு வந்த சிவாவிடம் ரேகா அதைப்பற்றி பேச தொடங்கினால்,

    "மாமா, ஒருவேளை அவளுக்கு நம்ம ரெண்டு பேரோட விஷயம் தெரிஞ்சிருச்சோ???."

    "அப்படி தெரிஞ்சிருந்தா, நம்ம கிட்ட  நேரா வந்து சண்டை போட்டிருப்பா?.. அவளுக்கு அதையும் தாண்டி வேற ஏதோ விஷயம் தெரிஞ்சிருக்கு, அதனால தான் அவளால மட்டும் இங்க தனியா நின்னு போராட முடியாதுன்னு, இங்க இருந்து தப்பிச்சு ஓட பாக்குறா."

  "இப்போ என்ன மாமா பண்றது?"

    "ம்ம்ம்......சித்ராவுக்கு சித்ரா பௌர்ணமி அன்னைக்கே நாள் குறிச்சிட வேண்டியதுதான்."


Thursday, October 16, 2025

பிம்பம் 16

 


அத்தியாயம் 16


    மெய்காரன் பட்டியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே சென்றது. அதனால் அந்த ஊருக்குள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் ரேகா எப்போதும் சாந்தியுடனே சித்ராவின் வீட்டிலேயே இருந்தால்.

  இப்போதெல்லாம் அவள் சித்ராவை கண்டு கொள்வதில்லை, நாளை சித்ரா பௌர்ணமிக்காக கோயிலில் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அது நடத்தக்கூடாது என்று அரசாங்கம் உத்தரவு பிறப்பித்தாலும், ஊர்காரர்கள் இது சாமிக்கு செய்ய வேண்டிய ஒன்று என்று கூறி அனுமதி பெற்று இருந்தனர். அரசாங்கம் குறிப்பிட்ட அளவில் மட்டும் ஆட்கள் கலந்து கொண்டு திருவிழாவை நிறைவேற்றுமாறு அனுமதி வழங்கியது. இருந்தும் ஊரார் அனைவருமே அதில் கலந்து கொள்ள தயாராகிக் கொண்டிருந்தனர்.

  சித்ராவிற்க்கு நடந்த விஷயங்களையே நினைத்துக் கொண்டிருந்தால், நிஜமாகவே பைத்தியமாகி விடுவோமோ என்ற அச்சம் தோன்றியது. அதனால் தன்னை வேலைகளுக்குள் மூழ்கடித்துக் கொண்டாள்,  வீட்டு வேலைகளை அவளே செய்ய ஆரம்பித்தால், மதிய நேரங்களில் கதை படிப்பதும், கூடை பின்னுவதும், குழந்தைக்கான ஸ்வட்டரை பின்னுவதுமாக பொழுதை போக்கிக் கொண்டிருந்தாள். 

ரேகா அன்று சாந்தியின் வீட்டில், ஹாலில் அமர்ந்து மும்மரமாக கணினியில் வேலை செய்து கொண்டிருந்தாள்.அவளுக்கு சற்று தள்ளி இருந்த சோபாவில் அமர்ந்து, சித்ரா குழந்தைக்கான ஸ்வட்டரை பின்னிக் கொண்டிருந்தாள். 

  சித்ரா முதலில் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொள்ளும் போது, கணினி அவர்களது அறையில் தான் இருந்தது. ரேகா அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகு, சித்ராவிற்கு தொந்தரவாக இருக்கக் கூடாது என்று கம்ப்யூட்டரை ஹாலுக்கு மாற்றி விட்டான் சிவா.

  சாந்தி திருவிழா பலகாரங்கள் சுட ரேகாவை உதவிக்கு அழைத்தார், ரேகா அவளது போனை, கம்ப்யூட்டர் அருகே வைத்து விட்டு சமையல் அறைக்கு சென்றாள்.

  சிறிது நேரத்தில் ரேகாவின் போன் அலற தொடங்கியதது,மீண்டும் மீண்டும் அழைப்பு வந்து கொண்டே இருந்ததால் ஏதாவது அவசரமாக இருக்கும் என்று நினைத்த சித்ரா, போனை ரேகாவிடம் எடுத்துக் கொடுக்க கணிப்பொறியின் அருகே வந்தவள் அப்படியே அதிர்ந்து நின்று விட்டாள், ஏனென்றால் கூப்பிட்டுக் கொண்டிருந்தது சிவப்பிரகாஷ். அவனோடு நெருக்கமாக நின்று எடுத்துக்கொண்ட போட்டோவை தான், போனில் இமேஜாக அவனுக்கு செட் பண்ணி இருந்தால் ரேகா, அத்தோடு அவனது பெயரை ஹஸ்பண்ட் என்று போனில் பதிந்திருந்ததை கண்டு, அதிர்ந்து போய் நின்று விட்டால் சித்ரா, ரேகா வரும் சத்தம் கேட்டு, உடனே அருகில் இருக்கும் தமது அறைக்குள் சென்று, மறைந்து நின்று கொண்டாள்.

  போனை எடுத்த ரேகா சுற்றிமுற்றி யாராவது இருக்கிறார்களா என்று  பார்த்துவிட்டு, அங்கே சித்ரா இருப்பது தெரியாமல் அங்கேயே நின்று பேச ஆரம்பித்தால்.

    "என்ன மாமா நான் இங்க இருக்கும் போது, அதிசயமா கூப்பிடுறீங்க?"

.......

    "என் வீட்ல இருக்கீங்களா? சரி இருங்க, அத்தை கிட்ட ஏதாவது சொல்லிட்டு உடனே அங்க வரேன்."

........

    கேட்டுக் கொண்டிருந்த சித்ராவிற்கு தலை சுற்றியது, இதயம் சற்று  அடைப்பது போல் இருக்க கஷ்டப்பட்டு தன்னை நிலைநிறுத்திக் கொண்டாள், ஒருவேளை தன்னை பைத்தியம் ஆக மாற்ற ரேகா எடுத்து கொண்ட முயற்சியில் தனது கணவனுக்கும் பங்கு உண்டோ என்று சந்தேகிக்க தோன்றியது.

  தாம் எப்படி ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்று உள்ளம் குமைந்தவள், பழைய சித்ராவாக மாறி, கோபத்தோடு ரேகாவின் வீட்டை நோக்கி பின் வாசல் வழியே சென்றால்.

  ரேகாவின் வீட்டை அவள் நெருங்கும் போதே, ரேகாவோடு அவள் கணவன்  சிவா சேர்ந்து சிரிக்கும் சத்தம் கேட்டது. திறந்திருந்த  ஜன்னல் வழியே பார்த்தவள் சிலையாகி போனால்.

  வயிற்றில் கருவினை சுமந்துகொண்டு காணக்கூடாத காட்சியை கண்டு கொண்டிருந்தால், தன்னைத் தொட்டு தாலி கட்டியவன் இன்னொருத்தியோடு நெருக்கமாக இருப்பதை,  உயிருக்குயிராய் வளர்த்த பெற்றோரை கூட இவன் மீது காதல் கொண்ட காரணத்தால் உதறிவிட்டு வந்தேனே? இதை பார்க்கவா?.... எனக்கு துரோகம் செய்ய எப்படி இவர்களால் முடிந்தது.    

  சித்ரா அங்கு நின்று கொண்டிருக்கும் போதே, அவர்கள் பேச்சில் தனது பெயர் அடிப்படுவதை கண்டு, கண்களை துடைத்துக் கொண்டு அதை கவனிக்க ஆரம்பித்தால்.

  "என்ன மாமா? எப்பவும் ராத்திரி, உன் பொண்டாட்டி குடிக்கிற பால்ல மயக்க மருந்து கலந்து கொடுத்துட்டு தான் என்னை பார்க்க வருவே, பகல்ல எப்பவும் உன் ஆசை பொண்டாட்டி பின்னாடி தானே சுத்துவே?.... இன்னைக்கு என்ன அதிசயமா பகல்ல என் கிட்ட வந்திருக்க?"

  "அவளை எம் பொண்டாட்டியா ஆக்கினதே நீதானே டி? அப்பறம் என்ன? அவ சொத்துக்காக அவளை மடக்க அண்ணணும் தங்கச்சியும் பிளான் போட்டீங்க,... அது வொர்க் அவுட் ஆகல,... அதனால நான் உள்ள பூந்துட்டேன். அவளை கரெக்ட் பண்றதுக்காக மாரியை நடிக்க வெச்சேன், இப்போ தொடர்ந்து நானே அவகிட்ட நடிச்சுக்கிட்டு இருக்கேன், சொந்த வீட்டிலேயே இன்னும் எத்தனை நாளைக்கு தான் நடிக்கறதோ?"

  "நான்தான் முதல்லையே சொன்னேனே மாமா, அவ ஒரு கறார் பேர்வழின்னு, என்ன..... நீ தான் கேட்கல. நீ இப்போ செஞ்சிட்டு இருக்க ப்ராஜெக்ட் மூலமாவே கோடிக்கணக்கில் பணம் வரும், அப்புறம் எதுக்காக அவ தான் வேணும் ஒத்தக்கால்ல நின்ன?"

    "நான் பண்ணிட்டு இருக்க ப்ராஜெக்ட்ல கோடி கணக்குல வருமானம் வரும் தான், ஆனா திடீர்னு போலீஸ் கேஸ்னு ஆச்சுன்னா?..... அரசியல் தான் நமக்கு பாதுகாப்பு.  அவளோட குடும்பம் அரசியல் பின்னணியைக் கொண்டது, அதன் மூலமா போனா சீக்கிரம் மேல வந்துடலாம் என்று பார்த்தேன். எங்க அவங்க அப்பன் தான் என்ன பண்ணாலும் சப்போர்ட் பண்ணவே மாட்டேங்கிறானே,.... நியாயவாதி மாதிரியே பேசுறான், அதனால தான் அவளை போட்டு தள்ளி சிம்பதி கிரியேட் பண்ணலாம்னு பார்க்கிறேன்,........ஆமா உன்கிட்ட அந்த ஆராய்ச்சி பத்தி கொடுத்ததெல்லாம் ஃபைல் பண்ணிட்டியா? நம்ம உடனே அதை மும்பைக்கு மெயில் அனுப்பனும். அதுக்கு போல்டர் போட்டு பாஸ்வேர்ட் சேவ் பண்ணிட்டியா?"

  "பண்ணிட்டேன் மாமா, அந்த ரிப்போர்டை எல்லாம் மெடிசன்னு பேர் போட்ட போல்டர்ல, உன் பேரையும் என் பேரையும் சேர்த்து, ரேகா சிவானு பாஸ்வேர்ட் செட் பண்ணி இருக்கேன்....... மாமா இப்போ கொரோனாவால செத்துட்டதா சொல்லி சமாளிச்சுட்டோம்..... ஒருவேளை இது கம்மியாயிடுச்சுன்னா ஆராய்ச்சிங்கிற பேர்ல, நாம பண்ற கொலைகளை கண்டுபிடிச்சிட மாட்டாங்களா?...... எனக்கு பயமா இருக்கு மாமா."

    "உனக்கு எதுக்கு பயம்?.... எப்படி இருந்தாலும் நம்ம ஊர்ல  போஸ்ட்மார்ட்டமை, டாக்டர் தண்டபாணி தான் பண்ணுவாரு, அவர் நம்ம கூட இருக்கும் போது நாம கொலையே செஞ்சு அனுப்புனா கூட, அதை தற்கொலை மாதிரி மாத்திடுவாரு.......எனக்கு இவளை தான் என்ன பண்றதுன்னு தெரியல???."

  "விடு மாமா, நம்ம திட்டப்படி ஊருக்குள்ள எல்லோரும், அவளை பைத்தியமுன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க, இனி அவளை  ஒரு வழி பண்ணிடுவோம்."

  சித்ராவால் அதற்கு மேலும் அங்கு நிற்க முடியவில்லை, துரோகி என்று நினைத்தால் இவர்கள் கொலைகார கூட்டமாக அல்லவா இருக்கிறார்கள்?... தனக்கு ஒரு ஆபத்து என்றால் எதையும் நினைக்காமல் துணிந்து எதிர்த்து நின்று விடுவால்,..... ஆனால் தன் வயிற்றில் இருக்கும் குழந்தை நினைத்து  அச்சப்பட்டால். 

    என்ன ஆனாலும் இவர்களது உண்மையான சொரூபத்தை ஊருக்கு வெளிச்சம்  போட்டு காட்டியே தீர வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டு, வந்ததே தெரியாதது  போல அங்கிருந்து தமது வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

  அவள் வீட்டிற்கு வந்த நேரம் அவளது மாமியார் பக்கத்து வீட்டிற்கு பேசுவதற்காக வெளியே சென்று இருந்தார். இதுதான் சமயம் என்று நினைத்தவல், கணினியில் அமர்ந்து அந்த போல்டரை தேடி,  அதற்கு பாஸ்வேர்டை கொடுத்து உள்ளே சென்றவள், அதிலிருந்த தகவல்களை படித்த போது தான், இவர்கள் எவ்வளவு ஆபத்தான விஷயத்தை மக்களுக்குள் புகுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதை புரிந்து கொண்டாள். வெளியே யாரோ வரும் சத்தம் கேட்க அதிலிருந்த அத்தனை தகவல்களையும் தனது ஈமெயிலுக்கு காபி செய்து ட்ராஃப்டில் ஸ்டோர் செய்து கொண்டாள். பின்பு கணினியை ஆப் செய்துவிட்டு, தனது அறைக்குள் சென்று படுத்து விட்டால்.

    அறைக்குள் வந்த சிவா, இவள் படுத்திருப்பதைக் கண்டு என்ன ஆனது என்று பாசமாக விசாரித்து, அவன் கையால் அவளது நெற்றியை தொட வருவதற்குள், அவளே தலையை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள்.

  "இல்ல,..... எனக்கு ஒன்னும் இல்ல, கொஞ்சம் தலை சுத்துற மாதிரி இருந்துச்சு அதுதான் படுத்துட்டேன்..... ஆமா நீங்க என்ன? இன்னைக்கு நேரமே வந்துட்டீங்க?"

" அதுவாம்மா? அது தான் திருவிழா ஆரம்பிச்சிடுச்சே,....நாளைக்கு சித்ரா பௌர்ணமி கோயில்ல ஃபுல்லா விசேஷமா இருக்கும். அதுக்கான வேலை எல்லாம் பாக்கணும் இல்ல, அதனால தான் மெடிக்கல் ஷாப்புக்கு இன்னைக்கும் நாளைக்கும் லீவு விட்டுட்டேன். சரி கோவிலுக்கு போறதுக்கு முன்னாடி உன்ன பாத்துட்டு போலாம்னு வந்தேன், உனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தா சொல்லு, இப்பவே டாக்டர் தாமோதரன் கிட்ட போயிட்டு வரலாம்."

  "வேண்டாம் வேண்டாம் சாதாரண தலை சுத்தல் தான் கொஞ்ச நேரம் படுத்து எழுந்தா சரியா போய்டும். நீங்க கிளம்புங்க."

  சிவாவும் அவளை நன்கு ஓய்வு எடுக்குமாறு கூறி விட்டு குளித்து ரெடியாகி கோவிலுக்கு சென்று விட்டான். அவன் அந்த இடத்திலிருந்து சென்று விட்டான் என்பதை உறுதி படுத்திக்கொண்டு, சித்ரா தனது பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றால், அவர்கள் சித்ராவின் உடல் நிலை சரியாக வேண்டும் என்ற காரணத்துக்காக, தமது குலதெய்வ கோயிலுக்கு பூஜை செய்ய சென்றிருந்தனர். அது போன் சிக்னல்கள் எதுவுமே கிடைக்காத, ஒரு அத்துவான காட்டுபகுதி.

    திரும்பத் திரும்ப தமது பெற்றோர்களுக்கு முயற்சி  செய்தவள் அவர்களின் போன் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாகவே தெரிவித்துக் கொண்டிருக்க, சோர்ந்து போய் அப்படியே அமர்ந்து விட்டாள்.

  எப்படியாவது இந்த வீட்டை விட்டு வெளியேறியே ஆக வேண்டும், அதற்கு என்ன செய்வது என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினால். நாளை சித்ரா பௌர்ணமி என்பதால் ஊரில் உள்ள அத்தனை பேரும் கோயிலில் ஒன்றாக குழுமி இருப்பார்கள். அது தமக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்தவள், பக்கத்து ஊரிலிருந்து ட்ராவல்ஸூக்கு போனில் அழைத்து, டிக்கெட் புக் செய்ய முயற்சி செய்தால்.

மெய்க்காரன் பட்டியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள காரணத்தால், இவளுக்கு டிக்கெட் கொடுக்க டிராவல்ஸில் தயங்கினர். அவள் தான் பிரசவத்திற்காக, தன் தாய் தந்தையரை சந்திக்க போவதாக கூறி, தனது மெடிக்கல் ரிப்போர்டையும் சேர்த்து அனுப்பி வைக்க, கர்ப்பமான பெண் என்பதால் டிராவல்ஸ் ஓனரும் அவள் நிலைமையை புரிந்து கொண்டு ஒத்துக்கொண்டார். 

  நாளை இரவு 8 மணிக்கு பஸ் கிளம்பும் என்று கூறி, டிக்கெட்டை புக்  செய்து விட்டதாக கூறினார். அவள் பணத்தை இங்கு பஸ் ஏற வரும்போது கொடுத்தால் போதும் என்றும் கூறினார். அவருக்கு நன்றிகள் பல கூறி நிம்மதியாக போனை வைத்தாள்.

  ஆனால் அவளின் நிம்மதிக்கும் அவளைப் போலவே ஆயுசு கம்மி என்று யார் கூறுவது?.... இந்த டிராவல்ஸ் ஓனரால்தான், அவள் தமது கணவனிடம் மாட்டிக் கொள்ளப் போகிறாள் என்று அப்போது அவளுக்கு தெரியவில்லை...


Tuesday, October 14, 2025

பிம்பம் 15


 

அத்தியாயம் 15


இன்று


  விக்ரம் ஜனாவை ட்ராக் செய்து, அந்த வழியாக தனது வண்டியில் வந்து கொண்டிருந்தான்.


ஜனாவை தூக்கிச் சென்றவர்கள் அந்த காட்டின் உள்ளே சென்று கொண்டே இருந்தனர், அப்போது அவர்களுக்கு ஒரு அழைப்பு வந்தது,


  "அண்ணா அந்த வார்டுபாய் குமாரு தான்  கூப்பிடறான்."


  " சரி ஸ்பீக்கர்ல போடு"


    "யோவ் எங்கய்யா போனீங்க? உங்களுக்காக எவ்வளவு நேரமா அந்த பொணத்தை வெளிய வச்சுட்டு நிக்கிறது?"


  " எது பொணத்தை  வச்சுக்கிட்டு நிக்கிறையா?  மார்ச்சுவரிக்குள்ள இருந்த பொணத்தை தான் நாங்க தூக்கிகிட்டு வந்துட்டோமே?'


    "என்னய்யா சொல்றீங்க? நீங்க கொண்டு போக வேண்டிய டெட் பாடியை மார்ச்சுவரிக்கு வெளியே தார்ப்பாய் போட்டு, யாருக்கும் தெரியாமல் மூடி வச்சிருக்கேன். டீ குடிக்க போயிட்டு வரதுக்குள்ள, வந்து வேற ஒரு பொணத்தை தூக்கிட்டு போய்ட்டீங்களா?"


அதைக் கேட்டதும் சட்டென்று வண்டி நின்றுவிட்டது.


   "என்னடா இவன் இப்படி சொல்றான்?"

   

"சரி வை நான் இப்ப திரும்ப கூப்பிடுறேன், டேய் அவனுங்க வேற எந்த பொணத்தடா கொடுத்து விட்டானுங்க? முதல்ல அவனுங்களுக்கு போன் போடு, எப்படியும் நம்ம பின்னாடி தானே வந்துட்டு இருப்பானுங்க? வண்டியில் இருந்து இறங்கு, பேசிட்டு அப்புறமா வண்டியை நம்ம இடத்துக்கு விடுவோம்."


மார்ச்சுவரியில் இருந்து ஜனாவின் உடலை வெளியே தூக்கி போட்ட இருவரில் ஒருவனுக்கு போனில் அழைத்தார்கள். அவர்களிடம் இந்த பிணம் மாறிய செய்தியை கூற, அவர்கள் அந்த பிணத்தை திரும்பக் ஊருக்குள் கொண்டு  செல்லும்போது யாராவது பார்த்தால் பிரச்சனையாகிவிடும், அதோடு அந்த பிணத்தை ஹாஸ்பிடலின் உள்ளே எடுத்துச் செல்வது சிரமம். அதனால் அந்த பிணத்தை அங்கேயே வைத்துவிட்டு  திரும்ப வருமாறு கூறினர். இந்த முறை சரியாக அனுப்பி வைப்பதாக கூறி போனை வைத்து விட்டனர்.


  இவர்கள் கீழே இறங்கி போனில் பேசி முடிப்பதற்குள் ஜனா தனது ஃபோனில் இருந்து விக்ரமுக்கு அழைப்பு விடுத்து விட்டான்.


  "பாஸ் எங்க பாஸ் இருக்கீங்க? என்னைய உசுரோட வச்சு எரிச்சிடுவானுங்க போல இருக்கு."


  "வந்துட்டு தான்டா இருக்கேன் வெயிட் பண்ணு. கூடிய சீக்கிரம் பக்கத்துல வந்துருவேன்."


  "பாஸ் அவனுங்க தேடி வந்த டெட்பாடி நான் இல்லைன்னு தெரிஞ்சிருச்சு, என்னை இங்கேயே காட்டுல ஓரமா போட்டுட்டு போய்,  திரும்ப அந்த டெட் பாடியை எடுக்க போறாதா பேசிக்கிறானுங்க. காடு வேற நல்லா இருட்டா கரு கும்முன்னு இருக்கு, ஏதாவது புலி சிங்கம் வந்து என்னை அடிச்சு சாப்பிட்டுட்டு போயிட போகுது சீக்கிரம் வாங்க பாஸ்."


  "ச்சே ச்சே அதுங்களுக்கு எல்லாம் டேஸ்ட் இல்லையா என்ன? உன்ன போய் சாப்பிடறதுக்கு? நொய்யி நொய்யிங்கமா போனை வைடா அப்பதான் நான் வர முடியும்."


  "எதே?... பாஸ் பாஸ் பாஸ் பாஸ் பாஸ் அடப்பாவி வச்சுட்டானே."


    அவர்கள் ஜனாவின் உடலை கீழே இறக்கி ஒரு ஓரமாக வைத்துவிட்டு, வண்டியை திருப்பிக் கொண்டு கவர்மெண்ட் ஹாஸ்பிடல் நோக்கிச் சென்றனர்.


    வண்டி தன்னை விட்டு அதிக தூரம் தள்ளி சென்றதை உணர்ந்த பிறகு தான், ஜனா அந்த போர்வைக்குள் இருந்து வெளியில் வந்தான்.  ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டவன், தன்னைச் சுற்றி இருள் மட்டுமே சூழ்ந்து இருப்பதைக் கண்டான். போனில் உள்ள டார்ச் லைட்டை ஆன் செய்தால் அதன் மூலம் ஈர்க்கப்பட்டு, ஏதாவது உயிரினம் தம்மை நோக்கி வரும் ஆபத்து இருப்பதால், அந்த யோசனையை கைவிட்டான். ஒரு மரத்துக்கு பின்னே நின்று கொண்டு இருட்டுக்கு தன் கண்களை பழக்கத் தொடங்கினான்.


  ஏதோ வித்தியாசமான சத்தங்கள் காட்டின் உள்ளே இருந்து வருவதை உணர்ந்து காதை கூர் தீட்டி, அதை உன்னிப்பாக கேட்கத் தொடங்கினான்.


  அந்த சத்தமானது தனக்கு சற்று தள்ளி உள்ள இடத்தில் இருந்து கேட்பது போல் தோன்ற, அதை நோக்கி செல்ல காலை எடுத்து வைத்த போது, அவன் முதுகில் ஒரு கரம் பதிந்தது.


    அதிர்ந்து அவன் திரும்பிப் பார்த்தபோது அங்கே விக்ரம் நின்று கொண்டு, தனது விரலை வாய் மீது வைத்து பேசாதே என்று கூறி, அவனை இழுத்துக்கொண்டு ஒரு மரத்துக்கு பின்பு சென்று மறைந்து கொண்டான். 


விக்ரம் ட்ராக்கரின் உதவியுடன் ஜனாவை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். அவர்கள் சென்ற பாதையானது காட்டினை காட்ட, இனி நடந்து சென்று தேடுவது தான் நல்லது என்று நினைத்து, காட்டிற்கு வெளியே வண்டியை மறைவாக நிறுத்திவிட்டு, காட்டினுள் நுழைந்தான். சிறிது தூரம் மொபைல் வெளிச்சத்தின் உதவியுடன் மெல்ல அவன் பாதையில் நடந்து கொண்டிருக்கும்போது அந்தப் பாதை இரண்டாகப் பிரிந்தது.


  எந்த திசையில் செல்வது என்று குழப்பத்தோடு நின்று கொண்டிருக்கும் போது தான் ஜனாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அவனுடன் பேசிக் கொண்டிருக்கும்போது தூரத்தில் ஒரு வெளிச்ச புள்ளி தெரிய ஜனாவை தூக்கிச் சென்று ஜீப் தான் திரும்பி வருகின்றது என்பதை புரிந்து கொண்டு, போனை அணைத்துவிட்டு மரத்திற்கு பின்னே ஒளிந்து கொண்டான். அந்த ஜீப் காட்டினை விட்டு வெளியேறியதும் ஜனா இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.


  அவர்கள் மறைந்து கொண்ட அடுத்து இரண்டு நிமிடங்களில், ஒரு பைக்கும் காரும் அவர்கள் இருந்த இடத்தை தாண்டி கொண்டு காட்டினுள் சென்றது.


  அது சென்ற திசையை நோக்கி இவர்களும் மெல்ல பயணிக்க தொடங்கினர். சற்று தூரத்திலேயே அந்த அடர்ந்த காட்டுக்கு நடுவே, சமதளமான நிலப்பரப்பை கண்டனர். அது காடுகளை அழித்து மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று தெளிவாகத் தெரிந்தது. அதன் நடுவில் இருக்கும் கட்டிடத்தை சுற்றிலும் ஆட்கள் பாதுகாப்பில் இருப்பதை உணர்ந்து, மெதுவாக மரங்களின் வழியே மறைந்து மறைந்து அதன் பின்பக்கத்தை சென்று அடைந்தனர். 


  அங்கிருந்த ஜன்னலின் வழியே அவர்கள் எட்டிப் பார்த்தபோது, வெள்ளை கோட் மாட்டிய பலர் நவீன மருத்துவ உபகரணங்களுடன், அவர்களுக்கு அருகே படுத்திருந்த மனிதர்களுக்கு ஏதேதோ இன்ஜெக்ஷனை செலுத்தியும், அவர்களது நிலைமையினை மானிட்டரில் கண்காணித்துக் கொண்டு குறிப்பு எழுதிக் கொண்டிருந்தனர். 


  படுத்திருந்த மனிதர்களை பார்க்கும்போது அவர்கள் உள்ளூர்வாசிகள் போலத்தான் தெரிந்தனர். ஆனால் அவர்கள் சுயநினைவு இல்லாத நிலையில் வெகு நாட்களாக படுத்திருப்பது போல தெரிந்தது.


  ஜனா ஜீப்பில்  தன்னை தூக்கி வந்தவர்கள் பேசிக்கொண்டதைப் பற்றியும், தனது யூகத்தைப் பற்றியும் விக்ரமிடம் விரிவாக எடுத்துரைத்தான்.  விக்ரம் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான்.


    "என்ன பாஸ் இந்த கேஸ் இருக்க இருக்க வேற வேற ரூட்ல போகுது?... ஆல்ரெடி எதுக்காக வந்தோமோ அதையே கண்டுபிடிக்கல?... அதுக்கு அப்புறம் தொடர்ந்து ரெண்டு கொலை வேற நடந்திருக்கு, அதை பற்றியும் இன்னும் எந்த க்ளூவும் கிடைக்கல, இப்போ இந்த ஆராய்ச்சி கூடம்.... எப்ப தான் பாஸ் இந்த கேஸ் முடியும்????"


  "இல்ல ஜனா இந்த கேஸ் முடிவுக்கு வந்துடுச்சு.  நாம குற்றவாளியை நெருங்கிட்டோம்."


அன்று


  சித்ராவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ரேகாவே, கடை கணக்கு வழக்குகளை பார்க்க ஆரம்பித்தால். சித்ரா தானே பார்ப்பதாக கூறினாலும், சிவா அவளை இப்போதைக்கு ஓய்வெடுப்பது தான் உன்னுடைய வேலை என்று கூறிவிட்டான், அதனால் ரேகா அடிக்கடி சித்ராவின் வீட்டிற்கு வர தொடங்கினாள்.


  சித்ராவின் ஒதுக்கம் ரேகாவிற்கு சந்தேகத்தை கிளப்பியது. ரேகா உடன் இருக்கும்போது அவள் தண்ணீர் அருந்துவதை கூட தவிர்த்தால்.


தனது கணவரிடம் இவர்களைப் பற்றிய உண்மைகளை கூறி விடலாம் என்று நினைத்தாலும், தனது மாமியார்  இதனைக் அறிந்து, தன்னிடம் ஏதாவது பிரச்சனை செய்ய ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது என்று பொறுமை காத்தாள். இப்போதுதான் அவர் நல்ல முறையில் நடந்து கொள்ள தொடங்கியிருக்கிறார், அதை கெடுத்துக்கொள்ள அவள் விரும்பவில்லை.


  இந்நிலையில் மெய்க்காரன்பட்டியில் சித்ரா பௌர்ணமி திருவிழாவிற்காக, கம்பம் நடப்பட்டது. ரேகா சித்ராவை கோவிலுக்கு சென்று வரலாம் என்று அழைக்க, சித்ரா தனக்கு சோர்வாக இருப்பதாகவும் சற்று நேரம் கழித்து அவருடன் தான் சென்று வருவதாகவும் கூறி மறுத்துவிட்டாள்.


    ரேகா அதற்குமேல் அவளை வற்புறுத்தாமல், தான் சென்று வருவதாக கூறி கோவிலுக்கு கிளம்பி விட்டால். மதியம் வீட்டுக்கு வந்த சிவாவிடம் கோயிலுக்கு சென்று வரலாம் என்று அவள் கூற, அவனும் அவளை கோயிலில் இறக்கி விட்டு விட்டு சிறு வேலை இருப்பதால் அதை முடித்து விட்டு வந்து, திரும்ப  அவளை கோவிலில் இருந்து கூட்டிக் கொண்டு செல்வதாக கூறினான்.


  சிவா அவளை கோவில் வாசலில் இறக்கிவிட்டு செல்ல, அவள் நடந்து மெதுவாக கோவிலினுள் சென்றாள். சாமி தரிசனம் செய்துவிட்டு பிரகாரத்தில் அவள் உட்கார்ந்து இருக்க, அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் சுவாமி பிரசாதம் என்று கூறி சர்க்கரை பொங்கலை அவளுக்கு கொடுத்தார். அவளும் அதை பக்தியுடன் கண்ணில் ஒற்றிக் கொண்டு, சாப்பிட்டு முடித்தாள்.


    பிரசாதம் கொடுத்தவள் அடுத்து நேராக ரேகாவிடம் தான் சென்று நின்றாள். அவள் கொடுத்த ஐநூறு ரூபாயை வாங்கி மடியில் வைத்துக் கொண்டு சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்று விட்டால்.ஆம் அவள் கொடுத்த பிரசாதத்தில் மருந்தை கலந்திருந்தால் ரேகா.


  சித்ரா தன் சுயநினைவை இழக்கும் வரை காத்திருந்தவள், அவள் கண்கள் நிலை குத்தி நின்ற பிறகு, அவள் அருகினில் வந்து தமது கட்டளைகளை சொல்லிவிட்டு, யாரும் பார்க்கும் முன்பே அருகில் எரிந்து கொண்டிருந்த தீபத்தின் அருகில், சித்ராவின் சேலை முந்தானையை நகர்த்தி வைத்து விட்டு, அங்கிருந்து சென்று ஓர் இடத்தில் மறைவாக நின்று கொண்டால்.


    தீபத்தில் அவளது முந்தானை பட்டு பற்றி கொண்டு எரிய ஆரம்பித்தது. சுய நினைவை இழந்திருந்த சித்ரா முந்தானியில் தீ பற்றி எறிய அப்படியே எழுந்து நடக்கத் தொடங்கினாள்.


  அங்கு சுற்றி இருந்தவர்கள் தான் இவளது முந்தானையில் தீ பற்றி கொண்டதை பார்த்து அவசரமாக வந்து தண்ணீர் ஊற்றி அணைத்தனர். ஆனால் அது கூட நினைவில்லாது, அவள் பாட்டிற்கு  நடக்க ஆரம்பித்தாள்.


ஏற்கனவே ஊருக்குள் இவளை பற்றி ஒரு மாதிரி பேச்சு இருந்தது. இப்போது ஊரார் முன்பு இவள் இப்படி நடந்து கொண்டதை பார்த்து, அனைவரும் அதை உண்மைதான் என்று சொல்ல தொடங்கி விட்டனர்.


அப்படியே தன் போக்கில் நடந்து கொண்டிருந்தவள், ஒரு கட்டத்தில் மயங்கி வீதியில் சரிந்தால். அக்கம் பக்கம் இருந்தவர்கள் தான், அவளது கணவருக்கு போன் அடித்து வரவழைத்தனர்.


    சரியாக அவனும் அந்நேரம் கோயிலை நெருங்கிக் கொண்டிருந்தான், இவ்வாறு செய்தி கேள்விப்பட்டதும் அவசரமாக வண்டியில் வந்து இறங்கினான். 


  வண்டியை பக்கத்தில் இருந்தவர்களிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, ஒரு ஆட்டோவை பிடித்து அவளை தூக்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்றான்.


    இப்போது சிவாவிற்குமே சந்தேகம் ஏற்பட்டது, இவளுக்கு ஒருவேளை மனநலம் பாதிக்கப்பட்டு விட்டதோ என்று, அதை வெளிப்படையாகவே ஊராரின் முன்பு புலம்பவும் செய்தான்.


  சிறிது நேரம் கழித்து சித்ராவிற்கு சுயநினைவு வந்த பிறகு அவளிடம் இதை பற்றி கேட்க, அவளுக்கு நடந்தது எதுவுமே ஞாபகம் இல்லை. கடைசியாக அந்த பிரசாதம் சாப்பிட்டது வரைதான் அவளது ஞாபகத்தில் இருந்தது. ஏன் இவ்வாறு தன்னை சுற்றி நடக்கின்றது என்று அவளுக்குமே புரியவில்லை. சிவா தான் அவளை ஆறுதல் படுத்தி சிறிது நேரம் ஓய்வு எடுக்குமாறு கூறிவிட்டு வேலை இருப்பதாக கூறி வெளியே சென்று விட்டான்.


  சாந்தி, இந்த பைத்தியக்காரியிடம் இருந்து தமது குலவாரிசை காப்பாற்றுமாறு வெளிப்படையாகவே புலம்ப தொடங்கிவிட்டார்.


  சித்ராவிற்கு தன்னைச் சுற்றி ஏதோ மாயவலை பின்னப்பட்டது போலவே தோன்றியது. இன்று நடந்த நிகழ்வுக்காக ரேகாவை சந்தேகப்படவும் அவளால் முடியவில்லை. ஆனால் ஒரு முடிவோடு தனது டைரியை எடுத்தவள் இதுவரை நடந்தவைகள் அனைத்தையும் அதில் எழுதி முடித்தால். தனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால் தன் குழந்தையை எப்படியாவது காப்பாற்றுமாறு அதில் எழுதினால். எதற்கும் இருக்கட்டும் என்று டைரியின் பின் பக்கம் தனது இமெயில் அட்ரஸையும் பாஸ்வேர்டையும் சேர்த்து எழுதி தனது அண்ணனுக்கு கொரியர் செய்து வைத்தாள்.


Sunday, October 12, 2025

பிம்பம் 14

 



அத்தியாயம் 14


இன்று

 

  ஜனாவும் விக்ரமும் வெள்ளை போர்வைக்குள் தங்களை சுருட்டிக்கொண்டு, காலியாக இருந்த ஸ்ட்ரக்சரில் படுத்துக்கொண்டனர்.


  உள்ளே வந்த பைக் ஆசாமிகள் மூவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.


"டேய் பாஸ் இங்க ஒரு டெட்பாடி தான் வெளிய ஸ்ட்ரக்சர்ல இருக்கும், அதை தூக்கிட்டு வாங்கன்னு சொன்னாரு, இங்க என்ன ரெண்டு  இருக்கு?


     " ஏதாவது புதுசா வந்த கேஸா இருக்கும், அதான் பாஸ் அடையாளம் சொல்லிவிட்டாரே நல்ல குண்டா கொழு கொழுன்னு இருக்கும்னு, இதுவா தான் இருக்கும், இதை தூக்கி பின்னாடி  வழியா வண்டிக்கு அனுப்பு"


  "ஏண்ணே நாம இப்படி எப்பவும் டெட்பாடியை தூக்கிட்டு போறோமே? இதோட சொந்தக்காரங்க வந்து கேட்டா பிரச்சினையாகாதா?"


  "ஃபுல்லா கவர் பண்ண ஒரு அனாதை பிணத்தை அவங்க கிட்ட கொடுத்துடுவாங்க, இது ஆல்ரெடி உடம்பு சரியில்லாத கேஸ்கிறதால முகத்தை திறக்க கூடாது,  மீறி திறந்தா நோய் உங்களுக்கும் தோத்திக்கும்னு சொல்லி தான் கொடுப்பாங்க. அதனால யாரும் முகத்தைத் திறந்து பார்க்க மாட்டாங்க."


   அவர்கள் மார்ச்சுவரியில் கிழக்கு மூலையில் இருந்த ஒரு டேபிளை நகர்த்த, அங்கு ஒரு சிறிய சுரங்க வழி தெரிந்தது. ஜனாவை தூக்கிக் கொண்டு போய் அதன் வழியே போட்டனர். அதில் சறுக்கி கொண்டே போய், ஆஸ்பத்திரிக்கு வெளியில் இருந்த சுவரை ஒட்டி வெளிவந்தான் ஜனா. அங்கு தயாராக காத்திருந்த இரண்டு பேர், ஜனாவின் உடலை அங்கிருந்த ஜீப்பில் ஏற்றினர்.


  "இந்த தாமோதரன் அன்னைக்கு சாகாம இருந்திருந்தா அடுத்த நாளே இந்த டெட் பாடியை தூக்கிட்டு போயிருக்கலாம், சரி கிளம்பலாமாண்ணே?"


" டேய் நம்ம வந்தது இந்த பாடி எடுக்குறதுக்கு மட்டும் இல்ல, பாஸ் இன்னைக்கு இன்னொரு வேலையையும் சேர்த்து சொல்லி இருக்காரு, மறந்துட்டியா ?"


   " ஆமாண்ணே, நல்லவேளை ஞாபகப்படுத்துனீங்க. நம்பர் 57 தானே? அதோ அங்க கீழ இருக்கு."


அந்த நம்பர் 57 என்ற ரேக்கை திறந்த போது, அது ஒரு டம்மி கதவாக தான் இருந்தது. அதன் உள்ளே ஒரு கம்ப்யூட்டர் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. வந்தவர்கள் அவசரமாக அந்த கம்ப்யூட்டரையும் கீபோர்டு சிபியூ என்று அனைத்தையும் அங்கிருந்த அட்டைப்பெட்டியில் வைக்க தொடங்கினர். சிபியூவை கழற்றி எடுக்கும் போது அதை கை தவறி கீழே போட்டனர். அப்போது அதிலிருந்த  ஹார்ட் டிஸ்க் சற்று தூரம் சென்று விழுந்தது அதை அவர்கள் கவனிக்க  தவறினார், ஆனால் விக்ரம் அதனை கவனித்துவிட்டான்.


"ஐயையோ பாஸ் இதையெல்லாம் எங்கேயாவது கண்காணாம கொண்டு போய் எரிச்சிட சொன்னாரு, நான் இதை பாதி காசுக்கு வித்திடலாம்னு நினைச்சேன் இப்படி சில்லு சில்லா போயிடுச்சே"


  வந்தவர்கள் அந்தப் டேபிளை நகர்த்தி பழைய படி வைத்து விட்டு மார்ச்சுவரிக்கு வெளியே கம்ப்யூட்டர் பொருட்களை தூக்கிக்கொண்டு சென்றனர். அவர்கள் சென்று விட்டனர் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, எழுந்த விக்ரம், கீழே விழுந்த அந்த ஹார்ட் டிஸ்கை எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டான்.


    பிறகு பாதுகாப்புக்காக எப்போதும் ஜனாவிடம் இருக்கும் ட்ராக்கரின் உதவியுடன் அவன் இருக்கும் இடத்தை ட்ராக் செய்ய தொடங்கினான்.


ஜனாவை ஏற்றிக்கொண்ட ஜிப் ஒரு காட்டுப் பகுதியை நோக்கிச் செல்ல தொடங்கியது. ஒரு நிறுத்தத்தில் சுற்றி யாரும் கவனிக்கிறார்களா என்று பார்த்துவிட்டு, அந்த காட்டினுள் இருந்த சிறிய வழியில் செல்லத் தொடங்கியது.


   போர்வைக்குள் இருந்த ஜனா கஷ்டப்பட்டு படுத்திருந்தான். அந்தப் போர்வையில் இருந்து வரும்  துர்நாற்றத்தால் குடலைப் பிரட்டிக்கொண்டு வாந்தி வருவது போல இருந்தது. அவ்வப்போது குலுங்கி கொண்டே ஓடிக்கொண்டிருக்கும் ஜீப்பானது, அவனுக்கு முதுகு வலியை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது. விறைத்த கட்டை போல படுத்திருக்க வெகுவாக சிரமப்பட்டான்.


  "ஆமா இந்த டெட்பாடிக்கு வழக்கம் போல நெருப்பு வெச்சிடலாமா? இல்ல டெஸ்ட் ஏதாவது பாக்கி இருக்கா?"


   "அங்க போனா தான் தெரியும், இந்த பாடி ஹாஸ்பிடல்ல இருக்குறத பாத்தா, வேற ஏதோ டாக்டர் கிட்ட போய் ட்ரீட்மென்ட் பார்த்திருப்பான் போல இருக்கு. அதனால என்ன சைடு எஃபெக்ட் வந்திருக்குன்னு ரிப்போர்ட் ரெடி பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்."


"அந்த வெளிநாட்டுக்காரனுங்க தயாரிக்கிற மருந்துகளை பரிசோதிக்க, இவனுங்களை சோதனை எலியா பயன்படுத்திக்கிறான். அதனால செத்துப் போறவனுகல நாம  ஊருக்கு தெரியாம இங்கே கொண்டு வந்து எரிச்சுக்கிட்டு இருக்கோம் , நல்ல பொழப்பு நம்மளுடையது நாலு காசு கிடைக்கும்னு இங்க வந்து சேர்ந்தா? இப்படி டெட் பாடியா கலெக்ட் பண்ணி, வெட்டியான் வேலைதான் பார்த்துக்கிட்டு இருக்கோம்."


"ஏண்டா சலிச்சுக்கிற சம்பளம் வாங்கும் போது மட்டும் இனிக்கிதோ?"


"அது என்னமோ உண்மைதான்ப்பா, ஆமா நாளைக்கு எம்எல்ஏ எலக்சனுக்கு நாமினேஷன் நடக்குதாமே? எப்படியும் ஊருக்குள்ள நிறைய பணம் புழங்கும். நாமளும் அந்த கூட்டத்தோடு சேர்ந்துக்கலாமா?...... எப்படியும் ஒரு மாசத்துக்கு எந்த ட்ரான்ஸ்ஷாக்ஷனும் பண்ண போறது இல்லைனு  பாஸ் சொல்லிட்டாரு, இனி அங்கேயாவது போய் காசு சேர்த்தலாம்."


அன்று

  அந்த பிரபலமான மனநல மருத்துவமனையின் வராண்டாவில்  நின்று கொண்டு சிவா, சித்ராவின் பெற்றோர்களிடம் சண்டையிட்டு கொண்டிருக்க, அவனின் சத்தம் கேட்டு உள்ளிருந்து வந்தார் ஐம்பது வயது மதிக்கத்தக்க மனநல மருத்துவரான ஜானகி அம்மாள்.


சிவாவை அமைதிப்படுத்தி சித்ரா இங்கு இருக்க வேண்டிய அவசியத்தை எடுத்து கூறத் தொடங்கினார்.


  "மிஸ்டர் சிவா கண்ட்ரோல் யுவர் செல்ப். படிச்சவர் தானே நீங்க?.... மனநல மருத்துவரை பார்க்க வர்றவங்க எல்லாருமே பைத்தியம் கிடையாது முதல்ல அதை புரிஞ்சுக்கோங்க? நீங்க சொன்ன மாதிரியே இது ஹார்மோன் சேஞ்சஸாகவே இருந்தாலும், அதை அப்படியே விட்டு விட முடியுமா? அவங்களை அமைதிப்படுத்தி நார்மலா வச்சுக்கிட்டா தானே அவங்களுக்கும் நல்லது, பிறக்க போற உங்க குழந்தைக்கும் நல்லது. அது புரியாம இப்படி ஹாஸ்பிடல்ல கத்திக்கிட்டு இருக்கீங்க?"


"மன்னிச்சுடுங்க டாக்டர்,நான் இப்படி நடந்துக்கிட்டது தப்புதான், சித்ரா போன் பண்ணி அழுகவும் எனக்கு கோபம் வந்துடுச்சு."


  "இட்ஸ் ஓகே, உங்க வைஃப்க்கு உடம்புல எந்த பிரச்சனையும் இல்ல, மேபி இது உங்க கல்யாணத்துக்கு முன்னாடி ஏற்பட்ட பாதிப்பா கூட இருக்கலாம்? அவங்க மனசுல இருக்குற பிரச்சனையை நாங்க பேசி தான் சரி பண்ண முடியும். அதனால ஒரு ரெண்டு மூணு நாள் அவங்க இங்க இருந்து சரியாகட்டும். அவங்களுக்கு உங்களோட இருக்குறது தான் சந்தோஷம்னா, கட்டாயம் நானே அவங்களை டிஸ்சார்ஜ் பண்ணதும், உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்க சொல்றேன் போதுமா?"


   சிவா அன்று முழுவதும் சித்ராவுடனேயே இருந்துவிட்டு, இரவு தான் தனது வீட்டிற்கு சென்றான். அங்கிருந்த அனைத்து செவிலியர்களும் சித்ராவிடம், சிவாவை பற்றி தான் பெருமையாக பேசிக் கொண்டிருந்தனர்.


  அடுத்த நாள் சித்ராவை பார்க்க ரேகா வந்திருந்தாள். அவளது நலம் பற்றி விசாரித்துவிட்டு சென்றாள்.


  ரேகாவை கண்ட ஒரு செவிலியர் அவளைப் பற்றி சித்ராவிடம் வந்து விசாரிக்க,


  " என் வீட்டுக்காரரோட மாமா பொண்ணு தான்க்கா, என்னோட பிரண்டு தான்."


  "முதல்ல அவ பிரண்ட்ஷிப்பை கட் பண்ணுமா?"


"ஏன் அப்படி சொல்றீங்க?"


   "அது ஒரு நச்சு பாம்புமா, அவ மட்டும் இல்ல அவ அண்ணா இருக்கான் பாரு அவளுக்கு மேல விஷம்.


  என்னோட பிரண்டு ஒருத்தி இருந்தாம்மா,பேரு மாயா. எப்பவுமே பணக்காரங்களை போல உடை உடுத்திப்பா, கொஞ்சம் ஆடம்பரப்பிரியை. ஆனா அவங்க ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலி தான், அவ ஒர்க் பண்ண அதே இடத்தில் தான் இந்த சித்ராவும் வேலைக்கு வந்து சேர்ந்தா.


  மாயாவை ஒரு பணக்காரின்னு நினைச்சு தன்னோட அண்ணணை பத்தி ஆகா ஓகோன்னு பெருமையா சொல்லி சொல்லியே, இரண்டு பேத்துக்கு லிங்க் பண்ணி விட்டுட்டா. ஒரு கட்டத்துல இவளோட உண்மையான குடும்ப சூழ்நிலை தெரிய வர, அந்த சித்ராவோட அண்ணன் நாகலிங்கம், இவளை யூஸ் பண்ணிக்கிட்டு கழட்டி விட்டுட்டான்.


அதுக்கு அப்புறம் அந்த சித்ராவும் வேற வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டா, இந்த நாகலிங்கமும் சரியா பேசறது இல்லைன்னு இவ நேரடியா அவன் கிட்ட பிரச்சனை பண்ண ஆரம்பிச்சா, என்ன ஆச்சுன்னு தெரியலமா?.... திடீர்னு ஒரு நாள் நடு வீட்டுல அவங்க அப்பா அம்மா கண்ணு முன்னாடியே தனக்குத்தானே நெருப்பு வச்சுக்கிட்டா. அவங்க அப்பா அம்மா எப்படியோ நெருப்பை அணைச்சு ஹாஸ்பிட்டல்ல கொண்டுவந்து சேர்த்துட்டாங்க. ஆனா, அவளுக்கு நினைவு வந்ததும் கேட்டா, நான் நெருப்பு வச்சுக்கவே இல்லன்னு சொல்றா, கடைசியா அந்த நாகலிங்கத்தை தான் காபி ஷாப்க்கு போய் பார்த்துட்டு வந்து இருக்கா.


கடைசியா அவனோட ஒரு கப் காபி சேர்ந்து குடிச்சது மட்டும்தான் ஞாபகம் இருக்கிறதா சொன்னா, அதுதான் அவ பேசின கடைசி வார்த்தை, அந்தப் பாவி காபில என்னத்த கலந்தானோ?.... இவ இப்படி பண்ணிக்கிட்டா!.. அதனாலதான்ம்மா சொல்றேன், அதுங்க எல்லாம் ஒரு விஷம், நீ எதுக்கும் பார்த்து பத்திரமா இருந்துக்கோ?"


  அப்போதுதான் சித்ரா சிந்திக்கத் தொடங்கினாள், ஒவ்வொரு முறையும் தான் இவ்வாறு நடந்து கொள்வதற்கு முன்பு, ரேகாவுடன் தான் இருந்திருக்கிறாள், அப்படி என்றால் இது அவளின் வேலையாக இருக்குமோ?... என்று சரியாக சந்தேகிக்க தொடங்கினாள்.


      அடுத்த நாள் சித்ராவை டிஸ்சார்ஜ் செய்து சிவா தனது வீட்டிற்கு அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.


  சித்ரா ரேகாவிடம் எச்சரிக்கையாக சற்று எட்டி இருந்தே பழகத் தொடங்கினாள். அவளோடு பேசுவதையே முற்றிலுமாக தவிர்த்து வந்தால்.


Wednesday, October 8, 2025

பிம்பம் 13

 


அத்தியாயம் 13


இன்று


  மும்பை நகரின் முக்கிய சாலையில் அமைந்த எம்.ஆர் என்ற பெயர் பலகை பொருத்தப்பட்ட அந்த கண்ணாடி கட்டிடத்தில், கோட் சூட் மாட்டிய ஒருவன் அவனுக்கு முன்பிருந்த ஆட்களை தாறுமாறாக ஹிந்தியில் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான். இங்கு நமது வசதிக்காக தமிழாக்கம் செய்து கொள்வோம்.


    "ஒரு ஆர்டரை ஒருத்தனுக்கு குடுக்குறோம்னா, அவனோட பேக்ரவுண்ட் பத்தி எல்லாம் விசாரிக்க மாட்டீங்களாடா? அந்த நாகலிங்கம் போலீஸ்ல மாட்டிட்டான்னு சொன்னவுடனே எனக்கு இங்க உதற ஆரம்பிச்சிடுச்சு. இப்போ அவனை யாரோ கொன்னுட்டதா சொல்றாங்க, அவனைக் கொல்ல வந்தவனையும் போலீஸ் என்கவுண்டர் பண்ணினதா சொல்றாங்க, என்னதான்டா நடக்குது அங்க?"


  "இல்ல பாஸ் அந்த நாகலிங்கம் நாம சொல்றபடி தான் நடந்துட்டு வந்தான். அந்த டாக்டர் தாமோதரனை கூட  அவன் தான் கூட்டிட்டு வந்தான், அவரு அங்க இருக்கிற கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல சீவ் டாக்டரா வொர்க் பண்றாரு, நம்ம வேலைக்கு இது ஈஸியா செட் ஆகும்னு தான் அவன்கிட்ட இந்த காண்ட்ராக்ட் கொடுத்தேன். ஆனா அவங்க ரெண்டு பேருமே இப்படி இறந்து போவாங்கன்னு நான் நினைச்சு கூட பார்க்கல. ஆனா அவங்க ரெண்டு பேருக்கும் மேல ஒருத்தன் இருக்கான், அவனோட ஆர்டர் படி தான் இவங்க நம்ம கூட டீலிங் வச்சுக்கிட்டாங்க பாஸ்."


   "அவனோட நம்பர் இருக்கா?"


"இ...இல்ல பாஸ், நாகலிங்கம் மூலமா தான் அவர் நம்மகிட்ட பேசிகிட்டு இருந்தார். அது அவனோட பாஸ்னு சொல்லி தான் அறிமுக படுத்தினான். இதுவரைக்கும் இரண்டு டைம் பேசி இருக்கார். மத்தபடி டீலிங்ஸ் எல்லாம் நாகலிங்கம் மூலமா தான் அவர் செஞ்சிட்டு வந்தார்."


    "முட்டாள் முட்டாள்,... அங்க நம்ம மருந்து கோடிக்கணக்குல மாட்டிக்கிட்டு இருக்கு,... இதுவரைக்கும் நாம எடுத்த சாம்பிள்ஸ் எவ்வளவுன்னு தெரியுமில்ல?.... இன்னும் இந்த ஆராய்ச்சியை கண்டினியூ பண்ணனும். இதை பாதியில விட்டோம்னா?... நமக்கு பணம் கொடுக்கிற வெளிநாட்டுக்காரனுக்கு என்னடா பதில் சொல்றது?..  இது பத்தி ஒரு வேளை வெளியே தெரிஞ்சது, நம்ம சாம்பல் கூட நம்ம குடும்பத்துக்கு கிடைக்காம மொத்தமா அழிச்சுடுவானுங்க."


"பாஸ் கேஸ் பத்தின ஃபைல் எல்லாம் நம்ம கிட்ட பத்திரமா இருக்கு."


"ஒன்னு செய், கற்பூரம் பத்த வெச்சு அதற்கு காமிச்சிட்டு, அந்த கற்பூரத்தை அதுக்குள்ளேயே போட்டு விடு. லூசு பயலே,... வெறும் பைலை வெச்சு நாம என்ன பண்றது?....  அந்த ஆளுங்க எல்லாம் வேற ஏதாவது டாக்டர் கிட்ட போனாங்கன்னா?... நம்ம மாட்டிப்போம்டா... அவங்களுக்கு தொடர்ந்து அந்த மருந்துகளை கொடுத்து, அந்த ஆராய்ச்சியோட முடிவை, அந்த வெளிநாட்டுக்காரங்களுக்கு ரிப்போர்ட் பண்ணனும் அது தெரியுமா இல்லையா உனக்கு?.... முதல்ல அந்த நாகலிங்கத்தோட பாஸ் யாருன்னு கண்டுபிடிச்சு அவனுக்கு ஒரு போன் போடு."


  அந்த நேரத்தில் அவன் பி.ஏ வின் போன் சரியாகி அடித்தது. 


   "பாஸ் அந்த  நாகலிங்கத்தோட நம்பர்ல இருந்து தான்  பாஸ் கால் வருது. அவனோட பாஸ்ஸா தான் இருக்கும் "


   "போனை ஸ்பீக்கரில் போடு."


  "ஹலோ சார் உங்க போன்கால்காக தான் நாங்க காத்துகிட்டு இருந்தோம்."


  "மிஸ்டர் எம் ஆர், நீங்க நான் பேசுவதை கேட்டுட்டு இருக்கீங்கன்னு எனக்கு தெரியும். உங்களோட ஆராய்ச்சிக்கு எந்த பாதிப்பும் வராது அதுக்கு நான் பொறுப்பு. இங்க வேற ஒரு டாக்டரை செட் பண்ணிட்டேன், இங்க கொஞ்சம் சிச்சுவேஷன் சரியில்லை அதனால இனி மருந்து அனுப்புறதை மட்டும் கொஞ்ச நாளைக்கு நிறுத்தி வைங்க. இங்க இருக்கிற மருந்து வச்சு ஆராய்ச்சியை கண்டின்யூ பண்ணிக்கிறேன். ஒரு ஒன் மன்த்குள்ள எல்லாத்தையும் சரி கட்டிட்டு மறுபடியும் டிரான்ஸ்பர்மேஷன் வச்சுக்கலாம். கண்டிப்பா ஆராய்ச்சி பாதியில நிற்க்காது,... அதோட இது வெளியவும் தெரிய வராது."


"உன்னை எப்படி நம்புறது?"


  "இவ்வளவு நாள் எதை நம்பி இந்த ப்ராஜெக்டை எங்களுக்கு கொடுத்திருந்தீங்க சார்ர்...  வெளிநாட்டுல  கண்டுபிடிக்கிற புது புது மருந்துகளை இங்க இருக்க ஆளுங்க மேல டெஸ்ட் பண்ணி, அதோட ரிப்போர்ட் எடுத்துக் கொடுக்க தமிழ்நாட்டுல எந்த ஊர்ல முன் வந்தாங்க???. இந்த ஆராய்ச்சியால் இங்க மூணு பேரு இறந்து போய் இருக்காங்க,... ஆனா அவங்க சாவை இயற்கையா நடந்ததா மாத்தி இருக்கேன். இந்த ப்ராஜெக்ட்ல ஆல்ரெடி பாதி வேலை நல்லபடியா  முடிஞ்சு கொடுத்துட்டேன், இதுக்கு மேல சந்தேகமா இருந்தா?.... நீங்க வேணும்ணா வேற பார்ட்டி பார்த்துக்கோங்க, பாய்"


"இல்ல இல்ல, உங்க ஆள் போலீஸ்ல மாட்டிக்கிட்டதா கேள்விப்பட்டேன் அதுதான்?...."


  "அவனை நேத்தே ஆல் வச்சு க்ளோஸ் பண்ணிட்டேன், இங்க டாக்டர் யூஸ் பண்ண அந்த ஆதாரத்தையும் போலீஸ் கைக்கு கிடைக்காத மாதிரி தூக்கிட்டேன்."


  "ஓகே ஓகே நான் உங்களை நம்புறேன். ஆராய்ச்சி மட்டும் கரெக்ட்டா நடக்குற மாதிரி பாத்துக்கோங்க, அண்ட் அதோட ரிசல்ட் மறக்காம அப்டேட் பண்ணிருங்க. நாங்க உங்களை இந்த நம்பர்லையே காண்டாக்ட் பண்ணலாமா?"


    "நோ நான் உங்களுக்கு தெரியணும்ங்குறதுக்காக தான், இந்த நம்பர்ல இருந்து கூப்பிட்டேன், கூடிய சீக்கிரம் நானே புது நம்பர்ல உங்களுக்கு கூப்பிடுறேன், இந்த நம்பரை இனி யூஸ் பண்ணாதீங்க பாய்."

   

    விக்ரமும் ஜனாவும் அந்த அர்த்த ராத்திரியில், அரசு மருத்துவமனைக்கு பின்புறம் இருந்த பிணவறைக்கு, பதுங்கிப்  பதுங்கி யாரும் பார்க்காதவாறு  சென்று கொண்டிருந்தனர்.


  "பாஸ் இது உங்களுக்கே நல்லா இருக்கா?.... ஒரு பச்ச குழந்தையை இப்படி அடிச்சு, அர்த்த ராத்திரியில மார்ச்சுவரிக்கு கூட்டிட்டு போறீங்களே இது உங்களுக்கே நல்லா இருக்கா பாஸ்?"


  "நீதான் பேய் ப்ரோவாச்சேடா, அப்புறம் என்ன உனக்கு பயம்?"


  "எதே? பாஸ் அன்னைக்கு அந்த பேயை பார்த்ததுல இருந்து, நைட்ல பாத்ரூம் போக கூட நான் ரூமை விட்டு வெளியே வர்றது இல்லை தெரியுமா?... இப்போ என்னை இங்க..... கூட்டிட்டு வந்து நிறுத்தி இருக்கீங்க,.... நாளைக்கு எனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா என்னோட அப்பா அம்மாக்கு யாரு பாஸ் பதில் சொல்லவா?"


  "அதெல்லாம் அவங்க உன்ன பத்தி கவலைப்பட மாட்டாங்க, உன்னை என் கூட ஊருக்கு அனுப்பும் போதே, தயவு செஞ்சு கொஞ்ச நாளைக்கு இவனை வீட்டு பக்கம் கூட்டிட்டு வந்துடாதேன்னு சொல்லித்தான் அனுப்பினாங்க."


அவர்கள் மார்ச்சுவரி கதவை திறந்து கொண்டு உள்ளே வந்திருந்தார்கள். ஜனாவின் கண்கள் பயத்தை பிரதிபலிக்க, விக்ரமின் கண்கள் எதையோ தீவிரமாக தேடிக் கொண்டிருந்தது.


    "டேய் சும்மா பயந்துகிட்டே நிற்காம ஏதாவது வித்தியாசமா கிடைக்குதான்னு போய் பாரு போ,.... ஒரு சின்ன க்ளு கிடைச்சா கூட போதும் இந்த கேஸை சால்வ் பண்ணிடலாம்."


  "இங்க வித்தியாசமா வேற என்ன பாஸ் கிடைக்கும்?.... விதவிதமா பிணங்களைத்தான் படுக்க வெச்சிருக்காங்க,.... முதல்ல நாம வந்தது சித்ரா கேஸ்காக?... சரி அதுதான் முடிக்கல, செத்துப்போன அந்த ரேகா பொண்ணு விஷயம் என்ன ஆச்சு? நீங்க சொன்னீங்கன்னு அவளோட போன் ஹிஸ்டரியை கொண்டு வந்து கொடுத்தேன், இப்போ அதை பத்தி விசாரிக்காம எதுக்காக இந்த டாக்டரை புடிச்சிட்டு  தொங்கறீங்க? இந்த கொலைக்கும் அந்த கொலைக்கும் என்ன சம்பந்தம்?"


  "சம்பந்தம் தானே ஸ்ட்ராங்கா இருக்கு,.... டாக்டர் கிட்ட இருந்து கிடைச்ச சிம் கார்டுக்கு, இன்னொரு அண்ஆர்தரைஸ்ட் நம்பர்ல இருந்து கால் வந்து இருக்குன்னு சொன்னேனே, அந்த நம்பருக்கு தான் ரேகா சாகறதுக்கு முன்னாடி கடைசியா போன் பண்ணி பேசி இருக்கா,.... இந்த சம்பந்தம் போதுமா? வாயை ரொம்ப நேரம் திறந்து வைக்காதே?... ஏதாவது ஆவி உள்ள பூந்திட போகுது?.. வாய மூடிட்டு வேலைய பாருடா."


  அப்போது பிணவறைக்கு வெளியே ஏதோ பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அதிலிருந்து இரண்டு மூன்று ஆட்கள் மார்ச்சுவரியை நோக்கி நடந்து வருவது போல் சத்தம் கேட்டது. உடனே விக்ரமும் ஜனாவும் மார்ச்சுவரியில் பிணங்களோடு பிணங்களாக ஸ்ட்ரக்சரின் மீது ஏறி  படுத்துக் கொண்டனர்.


அன்று


  இளநீரில் மருந்து கலந்துள்ளது தெரியாமல், சித்ரா அதை முழுவதுமாக குடித்துவிட்டாள். ரேகாவை மெயின் ரோட்டில் இறக்கி விடுவதாக கூறி அவளையும் உடன் அழைத்துக் கொண்டே காரில் ஏறினர் சித்ராவும் அவளது அம்மாவும்.


  அவர்கள் மூவரும் காரின் பின்புறம் அமர்ந்து கொள்ள, டிரைவர் வண்டியை இயக்கிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்திலேயே சித்ராவின் அன்னைக்கு போன் வர, அவர் அதில் மும்மரமாக பேசிக் கொண்டிருந்தார்.


    டிரைவரும் ரோட்டை பார்த்து வண்டி ஓட்டிக் கொண்டிருக்க, சித்ராவின் கண்கள் சிறிது நேரத்திலேயே நிலை குத்தி நின்றன, அதைப் புரிந்து கொண்ட ரேகா, சித்ராவின் காதருகே குனிந்து கட்டளைகளை இட ஆரம்பித்தால், அவள் இறங்கும் இடம் வந்ததும் சிரித்துக் கொண்டே சித்ராவின் அம்மாவிடமும் சித்ராவிடமும் கூறிவிட்டு ரேகா இறங்கிக் கொண்டாள்.


    வீட்டை அடைந்ததும் டிரைவர் கதவை திறந்து விட, சித்ரா இறங்கி நேராக சமையலறையை நோக்கிச் சென்றாள். அங்கு வைக்கப்பட்டிருந்த காய்கறி வெட்டும் கத்தியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையை நீட்டி அதை வெட்டுவதற்காக கையை ஓங்கினாள், ஆனால் அதை அவளின் பின்னே வந்த அவளது தாயார், கைகளை வெட்ட விடாமல் இறுக்கமாக பிடித்துக் கொண்டார். 


  அவரை தள்ளி விட்டுக் கொண்டு,சத்தமாக சிரித்துக் கொண்டே மறுபடியும் தனது கைகளை அவள் ஓங்க அவளை வெட்ட விடாமல் அங்கிருந்த வேலை ஆட்கள் பிடித்துக் கொண்டனர். சரியாக அந்த சமயம் அவளது தந்தையும் வந்து விட்டார்.


சிறிது நேரத்தில் அங்கிருந்து அனைவரும் சேர்ந்து அவளது கைகளை பிடித்து ஒரு துணியால் கட்டி, அவளை சமாளித்து கொண்டே ஒரு அறைக்கு கூட்டிச் சென்று விட்டனர். அவர்கள் இத்தனை செய்த போதும், சித்ரா வெறிபிடித்தவள் போல சத்தமாக சிரித்துக் கொண்டே தான் இருந்தால், ஒரு கட்டத்தில் மயங்கி அப்படியே கட்டிலில் சரிந்து விட்டால்.


   அவளது இந்த மாற்றத்தை கண்டு  அவளின் பெற்றோர் பயந்து விட்டனர். உடனே அவளின் தந்தை மருத்துவருக்கு அழைத்து விட்டார்.


  மருத்துவர் வந்து பார்த்து அவளை நன்கு பரிசோதித்து விட்டு, அவளுக்கு உடலில் எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு நல்ல மனநல மருத்துவரை சென்று பார்க்குமாறு அறிவுறுத்தி சென்றார்.


    தமது ஆசை மகளின் இத்தகைய நிலையை எண்ணி வருந்திய அவளது பெற்றோர்கள், அடுத்த நாளே அவள் எவ்வளவோ மறுத்து கூறியும், அதனை கருத்தில் கொள்ளாமல், அந்த ஊரிலேயே பிரபலமான மனநல மருத்துவரிடம் அவளை அழைத்துச் சென்றனர். விஷயம் கேள்விப்பட்டு கோபமாக மருத்துவமனைக்கு வந்த சிவா, சித்ராவின் பெற்றோர்களிடம் கத்த தொடங்கினான்.


  "என்ன நெனச்சிட்டு இருக்கீங்க?..

என் பொண்டாட்டியை பைத்தியம்னு நினைச்சிட்டீங்களா? அவ நார்மலா தான் இருக்கா,... நான் தான் சொன்னேன் இல்ல, இது பிரக்னண்டா இருக்குற டைம்ல வர்ற ஹார்மோன் சேஞ்ச் தான்னு. அது புரியாம அவளை இப்படி சைக்காடிஸ்ட் கிட்ட கூப்பிட்டு வந்து இருக்கீங்க? அவள பைத்தியம் ஆகிடலாம்னே முடிவு பண்ணிட்டீங்களா?.. நான் சித்ராவை இப்பவே என்னோட வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்."


Sunday, October 5, 2025

பிம்பம் 12


 

அத்தியாயம் 12

இன்று


    "சிஸ்டர் நாட்டுக்கோழி குழம்பு சூப்பர்!... அதுவும் இட்லிக்கு அப்படியே அள்ளுது... பாஸ் என்ன ஆச்சு? எதுக்காக இட்லியை குழம்புல ரொம்ப நேரமா குளிப்பாட்டிட்டு இருக்கீங்க?... பாஸ் இவ்வளவு நல்ல சாப்பாட்டை சாப்பிடாம என்ன ஒரே சிந்தனையிலேயே இருக்கீங்க?"


    "ப்ச்சு அந்த டாக்டர் தாமோதரனோட வீட்ல இருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியல, அவன் செத்து கிடந்த அந்த ரூம்லயும் நமக்கு உபயோகமா எதுவும் கிடைக்கல, அந்த டாக்டர் இறந்த இடத்தில ஒரு சிம் கார்டு கிடைச்சதுன்னு சொன்னேன் இல்ல, அது பக்கத்துல அவரோட போனும் கீழ விழுந்து சிதறி கிடந்தது. ஒருவேளை அவர் கீழே விழும்போது கைபட்டு அந்த போன் விழுந்திருக்கலாம்.


    அதுக்குள்ள அவர் மறைச்சு வைச்சிருந்த ஒரு சிம் கார்டா கூட இருக்கலாம் என்று நினைச்சேன்?.. அது தான் கமலேஷ் கிட்ட சொல்லி அப்பவே வெரிஃபிகேஷன் பண்ண சொன்னேன். அதுல இருந்து, டோட்டலா ரெண்டு மூணு நம்பருக்கு தான் கால் போயிருக்கு, அதுல  ஒன்னு நாகலிங்கத்தோட நம்பர்,  இன்னொன்னு யாருதுன்னு கண்டுபிடிக்க முடியல ஏன்னா இவரோட பேசரக்காக மட்டும் தான் அவன் யூஸ் பண்ணி இருக்கான், மூணாவது அதர் டிஸ்ட்ரிக்ட் காமிக்குது. இந்த கால் பண்ணும் போதெல்லாம் மோஸ்ட்லி அந்த டாக்டர் ஹாஸ்பிடலில் தான் இருந்திருக்கான். 


     சோ அங்க தான் ஏதோ விஷயம் இருக்கு. அது மட்டும் இல்லாம அந்த ஒரே ஒரு பாட்டிலையும் இன்ஜெக்ஷனயும் மட்டும் தான் அந்த கபோர்டுல வச்சிருப்பாரா? ஒருவேளை வேற எங்காவது அந்த மருந்தை மறைச்சு வைச்சிருக்கலாம் இல்லையா? பாரன்சிக்கு  கொடுத்திருந்த அந்த பாட்டிலும் காணாமல் போனதா சொல்றாங்க, நான் அதை போட்டோ எடுத்து வைச்சிருந்தேன், அதை பத்தி சர்ச் பண்ணி பார்த்தா அந்த காம்பினேஷன்ல எந்த ஒரு மருந்தும் இல்லைன்னு காட்டுது,   எதுக்கும் இருக்கட்டும்னு நம்ம கமலேஷ்க்கு அதை ஃபார்வேர்டு பண்ணி,  அவனுக்கு தெரிஞ்ச பார்மாசிஸ்ட்கிட்ட இத பத்தி விசாரிக்க சொல்லி இருக்கேன்."


  "அப்புறம் என்ன பாஸ்?  நம்ம காதல் மன்னன் கமல் எப்படியும் அதற்குண்டான ஆன்சரை கண்டுபிடிச்சிடுவான். ஆமா ஹாஸ்பிடல்ல அந்த இன்ஸ்பெக்டரை எதுக்கு தனியா ஒதுக்கி கூட்டிட்டு போனீங்க? அப்புறம் நாம எதுக்காக டாக்டர் தாமோதரனோட கேஸ்ல இன்வால்வ் ஆகறோம்?... நாம வந்தது சித்ராவோட கொலை வழக்கை பத்தி விசாரிக்க தானே? நீங்க ஏன் பாஸ் ட்ரேக் மாறறீங்க?"


  "ட்ரேக் எல்லாம் மாறல, என்னோட கெஸ் சரின்னா, சித்ராவோட கொலையில இந்த தாமோதரனோட பங்கு இருக்கணும்னு நினைக்கிறேன். மறந்துட்டியா அவர் இறக்கறதுக்கு முன்னாடி நாகலிங்கமும் அவரோட தான் இருந்திருக்கான். நாகலிங்கத்துக்கு அந்த இன்ஜெக்ஷனை போட்டுவிட்டதே அந்த டாக்டர் தான். நீ கூட சொன்னியே, ரேகா இறந்தபோது சித்ரா ஒரு இன்ஜெக்ஷனை பத்தி சொன்னதா?.. ஒருவேளை இந்த இன்ஜெக்ஷனை போட்டு தான், சித்ராவை தங்களோட கட்டுப்பாட்டுல வைச்சு,  ஊர் முன்னாடி அவளை பைத்தியமா காட்டி இருப்பாங்களோ? இதுக்கெல்லாம் விடை தெரியணும்னா முதல்ல அந்த மருந்து எங்க இருக்குன்னு கண்டுபிடிக்கணும். ஆனா இந்த டாக்டர் அதையெல்லாம் எங்க மறைச்சு வச்சிருக்கான்னு தெரியலையே அவன் இறந்து கிடந்து ரூம்ல, ஒரு பேப்பர் இருந்ததுன்னு சொன்னேனே, அது எல்லாமே மருந்துகளோட காம்பினேஷன் பட் அதுல இருக்க ஒரு பகுதி தான் இப்போ புழக்கத்தில் இருக்கு,  இன்னொரு பகுதி புது காம்பினேஷன் மாதிரி தெரியுது அதை பற்றியும் விரிவா கமலை விசாரிக்க சொல்லி இருக்கேன்."


  "அண்ணா என்ன அப்படியே வச்சிருக்கீங்க? இன்னொரு இட்லி வைக்கவா?"


    "இல்ல தேவிம்மா, எனக்கு இதுவே போதும், நீ சாப்டியா? பையனுக்கு சாப்பிட குடுத்தியா? சரி ஒரு நிமிஷம் இரு இதோ வரேன்."


  "இந்தாம்மா உன்னோட சம்பளம், நாங்க இங்க எவ்வளவு நாள் இருப்போம்னு தெரியாது? அதனால மாச கடைசில குடுக்குறதுக்கு பதிலா வாரா வாரம் கொடுத்திடறேன் சரியா?"


  "இதெல்லாம் இப்போ  வேண்டாங்கண்ணே, என் புருஷன் கண்ணுல மட்டும் இந்த காசு பட்டதுன்னா? அப்புறம் அவ்வளவு தான். கடல்ல கரைச்ச உப்பு மாதிரி ஆயிடும், அதனால இது உங்க கிட்டயே இருக்கட்டும். நீங்க இந்த ஊர்ல இருந்து கிளம்பும்போது  நான் ஒட்டுக்காவே சம்பளத்தை வாங்கிக்கிறேன். முதல்ல எல்லாம் என் வீட்டுக்கு பின்னாடி இருக்க ஒரு புளிய மரத்தடியில் இருந்த கல்லறையில தான் காசை ஒளிச்சு வைப்பேன். அந்த ஆளு பேய் பயத்திலயே அங்க போக மாட்டான், அதனால என் காசு பத்திரமா இருந்துச்சு. ஆனா கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் கோடாங்கிய கூட்டிட்டு வந்து அந்த கல்லறையை தோண்டி எடுத்துட்டான், இனி நான் எங்க போய் பத்திரப்படுத்துவேன்?"


    "எது கல்லறைலையா? ஏன் சிஸ்டர் உங்களுக்கு காசு வைக்கிறதுக்கு வேற இடமே கிடைக்கலையா?"


   "வேற என்ன பண்றதுண்ணே? இந்த ஊர்காரங்க பேய்க்கு மட்டும்தான் பயப்படறாங்க!... இது மட்டுமா ஊருக்குள்ள பல இடம் இருக்கு, பேய் பயத்தால ஊராளுங்க ஒருத்தரும் அது கிட்டயே போக மாட்டாங்க, ஊருக்குள்ள நுழையும் போது பார்த்திருப்பீங்களே!... அந்த புளியமரத்து கிட்ட யாரும் போகவே மாட்டாங்க,... அதேபோல கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல அந்த பிணவறைகிட்டயும் யாருமே போக மாட்டாங்க,... ஏதோ அங்கேயும் பேய் நடமாட்டம் இருக்கிறதா சொல்லுவாங்க!... அப்புறம் அந்த மருந்து கடைக்கு பின்னாடி இருக்கிற காட்டுக்குள்ளயும் ஒருத்தரும் போக மாட்டாங்க!... அந்த காட்டுக்குள்ள இருந்து நைட்டு நேரம் ஏதேதோ வினோதமா சத்தம் வர்ரதா கூட ஊர்ல எல்லாரும் சொல்லுவாங்க."


  "என்ன அண்ணே இது? பெரிய அண்ணே அப்படியே உறைஞ்சு போயிட்டாரு?"


    "அப்படின்னா அவர் ஏதோ யோசிச்சிட்டு இருக்காருன்னு அர்த்தம். ஆமா என்ன உன் பையனை கண்ணுலையே காட்ட மாட்டேங்குற? ஒன்னு முந்தானைக்குள்ள இருக்கான், இல்ல தொட்டில்ல தூங்கிட்டு இருக்கான். ரொம்பதாம்மா உன் பையனை பொத்தி பொத்தி வளர்க்கறே" 


  "என்ன பண்றது அண்ணே, இவன் மற்ற குழந்தைகளை மாதிரி பத்து மாசத்துல பிறந்திருந்தா பரவால்ல, கொறை பிரசவத்துல பிறந்தவன், எல்லாமே லேட்டா தான் செய்யறான் அதனாலயே கைக்குள்ளேயேதான் வச்சிருக்கேன். பார்ப்போம் அந்த ஆண்டவன் அவனுக்கு ஒரு நல்ல வழி காட்ட மாட்டானா என்ன?"


"ஐயோ தேவி சிஸ்டர், நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். மருமகனுக்கு என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க? கண்டிப்பா நாங்க ஊருக்குப் போகும்போது அவனை கூட்டிட்டு போய் நல்ல ஹாஸ்பிடல்ல சேர்த்து அவனை நாங்க பார்த்துக்கிறோம்."


  "நீங்க எனக்கு இப்ப செய்ற உதவியே போதுங்கண்ணே.."


    அப்போது டிவியில், சிறையில் இருந்த நாகலிங்கத்தை யாரோ கொலை செய்துவிட்டு தப்பி ஓடும் போது, அந்த மர்ம நபர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக முக்கிய செய்தி ஓடிக் கொண்டிருந்தது.


அன்று


சிவா சித்ராவை அவளது அன்னையின் வீட்டில் தங்க வைக்க முடிவு செய்த பிறகு, அவளிடம் தான் அதிகமாக கெஞ்ச வேண்டி இருந்தது. என்னை நம்ப மாட்டீங்களா? நான் போக மாட்டேன் என்று அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டாள்.


    அவள் இங்கு இருந்தால் தன் அம்மா ஏதாவது கூறி அவள் மனது நோகும்படி செய்துவிடுவார், இது குழந்தைக்கும் நல்லதல்ல என்று கூறி கூறியே ஒரு வழியாக அவளை சம்மதிக்க வைத்திருந்தான். பிறகு சித்ராவின் பெற்றோர்களிடம் ஓரளவுக்கு உண்மையை கூறி, அவளின் மன அமைதிக்காக அங்கு தங்க வைப்பதாக அவர்களிடம் அனுமதி பெற்று இருந்தான்.


    மகள் மீது உயிரையே வைத்திருந்த பெற்றோர்கள், மகள் நெருப்பு வைத்துக் கொண்டால் என்று கேட்ட பிறகு பதறி விட்டார்கள். அவர்களை ஒருவழியாக சமாளித்து, டாக்டர் கூறியதை இவன் எடுத்துக் கூறி, கர்ப்ப காலத்தில் இது போன்ற மன அழுத்தம் ஏற்படும் என்றும், இதற்கு மன அமைதி ஒன்றே தேவை, அதனால் சித்ரா சிறிது காலம் தங்களோடு இருக்கட்டும் என்று கூறி இருந்தான்.


  அன்று சித்ரா தனது பெற்றோரை சந்தித்த அந்த கெஸ்ட் ஹவுஸில், சிறிது காலம் தங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு, அவளை அங்கு விட்டு வந்தான் சிவா.


    அன்னை தந்தை பராமரிப்பில் இருந்தாலும், தனது கணவன் தன்னுடன் இல்லாத காரணத்தால், சித்ரா மிகவும் சோர்வாகவே காணப்பட்டாள். என்னதான் மணி கணக்கில் தொலைபேசியில் பேசினாலும், அவன் கைகோர்த்து தோல் மீது சாயும் தருணங்களை எண்ணி, ஏங்க தொடங்கினாள். சிவாவும் வாரத்திற்கு இருமுறையாவது எப்படியாவது அவளை வந்து பார்த்துவிட்டு தான் செல்வான்.


    என்னதான் சித்ராவின் பெற்றோர்கள் அவர்களது காதலை ஏற்றுக் கொண்டாலும், அவனுக்கு அங்கு தங்குவது ஒருவித சங்கடமான சூழ்நிலையை தான் கொடுத்தது. அதனாலேயே அதை தவிர்த்தான்.


  ஒரு வாரம் கழித்து சித்ராவின் ரெகுலர் செக்கப்புக்கான நாள் வந்தது. தனது தாயை உடன் அழைத்துக் கொண்டு, மருத்துவமனைக்கு சென்றிருந்தாள். அப்போது அந்த மருத்துவமனையில் ரேகாவை சந்தித்தாள்.


  "அடடே சித்ரா,.. ரெகுலர் செக்கப்புக்காக வந்தியா? நல்லா இருக்கியா? அம்மா,... நீங்க நல்லா இருக்கீங்களா?"


  சித்ராவின் தாயார் ஒரு தலையசைப்போடு நிறுத்திக் கொண்டார். ஏனோ ரேகாவை அவருக்கு பிடிக்கவில்லை, ஒருவேளை தன் மகள் காதல் திருமணம் புரிந்து கொண்டதற்கு காரண கர்த்தாவே அவளாக இருப்பதாலோ என்னவோ?..


  "நீ என்ன ரேகா ஹாஸ்பிடல் வரைக்கும் வந்து இருக்கே? உடம்புக்கு ஏதும் சரி இல்லையா?"


    "கொஞ்ச நாளாவே தலைவலியா இருந்தது, அதுதான் என்னன்னு பாத்துட்டு போலாம்னு வந்தேன், எதுவும் பிரச்சினை இல்லை, நார்மல் தானாம், நேரா நேரத்துக்கு சாப்பிட சொல்றாங்க அவ்வளவுதான், காலைல வேற நான் சாப்பிடாம வந்துட்டேன்,..  சித்ரா வர்ரியா? அங்க இளநீர் கடைல ஒரு இளநீர் குடிக்கலாம்."


  கண்களாலயே வேண்டாம் என்று சொன்ன, தனது தாயின் மறுப்பையும் புறக்கணித்துவிட்டு, ரேகாவிற்காக பாவம் பார்த்து அவளுடன் சென்றால் சித்ரா, அதுதான் தவறாகிவிட்டது.


  இளநீர் கடையில் சித்ராவிற்கு வாங்கிய இளநீரில் யாருக்கும் தெரியாமல் ஒரு மருந்தை  கலந்து விட்டாள் ரேகா. 


    சிரித்த முகத்தோடு அந்த இளநீரை சித்ராவிற்கு அருந்த கொடுத்து விட்டு, அவள் குடித்துக் கொண்டிருப்பதை ஒருவித மர்ம புன்னகையுடன் பார்க்கத் தொடங்கினாள் ரேகா.