Search This Blog

Followers

Powered By Blogger

Tuesday, September 30, 2025

பிம்பம் 10


 அத்தியாயம் 10


இன்று


  "டாக்டரோட  ஃபேமிலிக்கு தகவல் சொல்லியாச்சா?" 


    "சார் அவங்க எங்கேயோ வெளியூர் போயிருக்காங்க? பக்கத்து வீட்டுல இருக்கிறவங்க கிட்ட, டாக்டரோட மனைவி போன் நம்பர் வாங்கி தகவல் கொடுத்துட்டோம். இப்போ இங்க தான் வந்துட்டு இருக்காங்க."


    விக்ரம் தாமோதரனின் சடலம் கிடந்த இடத்தில், ஏதாவது தடயம் கிடைக்கின்றதா என்று தேடிக் கொண்டிருக்க, இன்ஸ்பெக்டர் அங்குள்ளவர்களிடம் அவரது விசாரணையை தொடங்கினார்.


  "யார் சம்பவத்தை முதலில் பார்த்தது?"


   "நான் தானுங்க சார்,நான் இங்க பகல்ல  வாட்ச்மேனா வேலை செய்றேன் சார், காலையில வந்ததும் ஹாஸ்பிடல்ல இருக்க  ரூம்களை எல்லாம் திறந்து விடுவேனுங்க, அதுக்கு அப்புறம் தான் சுத்தம் செய்யறவங்க வந்து, அதை கிளீன் பண்ணிட்டு போவாங்க. அப்படி சாரோட கதவை திறந்து விடலாமுன்னு வந்தப்பதான்  தாமோதரன் டாக்டரோட ரூம் கதவு திறந்தே இருக்கிறதை பார்த்தேன். இங்கே உள்ள வந்து பார்த்தா இவர் இப்படி கிடக்காரு.. உடனே போலீசுக்கு போன் பண்ணிட்டாங்க சார்."


  "நைட் வாட்ச்மேன் எங்க?  அவரை உடனே இங்கு வர சொல்லுங்க."


    " சார் ஆல்ரெடி தகவல் கொடுத்திட்டோம். அதோ அவரே வந்துட்டு இருக்கார் பாருங்க."


  "வணக்கம் சார், எம்பேரு மாணிக்கம். நான் தான் இங்க நைட் வாட்ச்மேனா ஒர்க் பண்றேன்."


  "டாக்டர் தாமோதரனை நீங்க கடைசியா எப்போ பார்த்தீங்க?"


  " டெய்லி சாயந்திரம் 6:00 மணிக்கு எல்லாரும் கிளம்பினதும், ரூம்  எல்லாத்தையும் பூட்டிட்டு, டீக்கடைக்கு டீ குடிக்க போயிட்டு வருவேன் சார். நேத்து அப்படி தாமோதரன் சார் ரூமுக்கு போனப்போ, அவர் கிளம்பாம ரூம்லயே இருந்தாரு. தனக்கு வேலை இருக்கிறதாகவும், தன்னை சந்திக்க ஒரு ஆள் வருவாருன்னும் சொன்னாரு. நான் டீ குடிக்க போறேன்னு சொன்னதுக்கு, சரி நீ கெளம்பு நான் வேலையை முடிச்சுட்டு, நானே இந்த ரூமை பூட்டிட்டு கிளம்பிக்கறேன்னு சொன்னாரு, நானும் போகும்போது வெளி கேட்டை சாத்திட்டு தான் சார் போனேன், நான் திரும்பி வந்தப்போ கேட் திறந்தே இருந்துச்சு, எப்பவும் டாக்டரோட கார் பில்டிங்க்கு பின்னாடி தான் நிக்கும், நான் கதவு திறந்திருந்ததால அவரு கிளம்பிட்டாருன்னு நினைச்சிட்டேன். விடிய  காலைல இப்படி செய்தி வந்ததும் தான் இங்கன ஓடியாரேன் சார்."


    அவர் கூறியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த விக்ரம், ஜனாவிற்கு அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை கண்காட்டிட, புரிந்து கொண்டதாக தலையை ஆட்டிவிட்டு அவன் சென்று விட்டான். பிறகு இன்ஸ்பெக்டரிடம் திரும்பியவன்,


  "இன்ஸ்பெக்டர் சார் எப்படி ரேகா கர்ப்பமா இருந்ததாலதான் அவளோட அண்ணன் குத்திக் கொலை செஞ்சிருக்கான்னு சொல்றீங்க? அவனே ஏதாவது சொன்னானா?"


  "ஆமா சார், பைத்தியம் புடிச்ச மாதிரி நேரா பாத்துகிட்டே, அவ கர்ப்பமா இருக்கா அதனால தான் அவளை கொலை செய்தேன், அப்படின்னே திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டே இருந்தான், ஆனா கொஞ்ச நேரத்திலேயே என்னை எதுக்காக கூட்டிட்டு போறீங்க? நான் என்ன தப்பு செஞ்சேன்னு? உளர ஆரம்பிச்சுட்டான். 


  உன் தங்கச்சியை கொலை பண்ணின குற்றத்துக்காக கைது பண்றோம்னு சொன்னதும், என்ன என் தங்கச்சி இறந்துட்டாளா? நான் குத்தி கொண்ணுட்டனா?  இல்ல நான் அப்படி எதுவும் பண்ணவே இல்லைன்னு, உளர ஆரம்பிச்சிட்டான். ரொம்ப அரகெண்ட்டா நடந்துகிட்டான். அவன புடிச்ச ஜெயில்ல போடுறதுக்குள்ள ஒரு வழி ஆயிடுச்சு."


  "நாங்க இப்போ அந்த பொண்ணோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம், இதே ஹாஸ்பிடல்ல தான் அந்த பொண்ணுக்கு போஸ்ட்மார்ட்டம்  நடந்துட்டு இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல ரிசல்ட் கைக்கு வந்திடும். உங்களுக்கு சித்ரா கொலை வழக்குல இவங்க மேல சந்தேகம் இருக்குதா என்ன? அதனால தான், அவங்க வீட்டை கண்காணிக்க உங்க அசிஸ்டென்டை அனுப்பினீங்களா?"


  "ஆமா சார், சித்ரா இறக்கறதுக்கு முன்னாடி தன்னை சுத்தி ஏதோ தப்பா நடக்குதுன்னு சொல்லி, தன்னோட டைரியை அவங்க அண்ணனுக்கு அனுப்பி வைச்சிருக்காங்க, அவர் எல்லையில் போராடிட்டு இருந்தனால அப்போ அவர் கைக்கு அந்த டைரி கிடைக்கல. சித்ரா இறந்து ரொம்ப மாசம் கழிச்சு தான் அவருக்கு அது கையில கிடைச்சிருக்கு. அதுல இவங்கள பத்தி சந்தேகமா இருக்கிறதா தான், எழுதி இருக்காங்க. அவங்க அண்ணா அந்த டைரியையும் சேர்த்துதான் என்கிட்ட கொடுத்து இருக்கார். நானும் படிச்சு பார்த்தேன். இந்த நாகலிங்கத்தை சித்ரா கல்யாணத்துக்கு முன்னாடியே, பஸ்ல தன்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணியதா சொல்லி  போலீஸ்ல புடிச்சு கொடுத்திருக்காங்க."


  இவர்கள் பேசிக் கொண்டே டாக்டரின் அறைக்கு வந்திருந்தார்கள் அவர் அப்போதுதான் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை எழுதி முடித்து கையொப்பமிட்டு கொண்டிருந்தார். அங்கு அவரின் முன் அமர்ந்திருந்த ஒரு இளைஞன், ரேகாவின் இறப்பு பற்றி அவரிடம் பேசிக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் தான் இன்ஸ்பெக்டரும் விக்ரமும் அறையினுள்ளே நுழைந்தனர்


    "அடடே சிவா சாரா!.. உங்களை ஊருக்குள்ள பார்க்கறதே முடியாத காரியமா இருக்கு? எப்பவும் சென்னையிலேயே இருக்கறீங்க போல?"


  "ஆமா சார் தள்ளி வைத்திருந்த எலெக்சனை இப்பதான் வைக்க போறாங்க, அதோட இந்த டைம் என்னை தான் எம்எல்ஏ கேண்டிடேட்டா தேர்ந்தெடுத்து இருக்காங்க, அதனால கொஞ்சம் கட்சி வேலை ஜாஸ்தியா இருந்தது. அவங்க தேர்தல் நாள் அறிவிச்ச உடனே இனி ஊர்ல தான் ஒர்க்.


    என்னால நம்பவே முடியல சார்!.. ரேகா பிரக்னண்டா இருந்தாங்கிறதும், அது காரணமா நாகலிங்கம் அவளை கொலை செஞ்சுட்டாங்கிறதும், எங்களுக்கே அதிர்ச்சியா இருக்கு, ரேகா ரொம்ப அமைதியான பொண்ணு, நாகலிங்கமும் அப்படித்தான் ரொம்ப நல்ல பையன், அவன் இருக்கிற காரணத்தால தான், நான் இங்க கடையை அவன் பொறுப்புல விட்டுட்டு, சென்னையில் கட்சி வேலையா அலைஞ்சுட்டு இருக்கேன். இப்படி திடீர்னு சொல்லவும் என்னால நம்பவே முடியல."


  அப்போது அவசரமாக உள்ளே வந்த ஜனா இன்ஸ்பெக்டரிடமும், விக்ரமிடமும் கூறிய செய்தி கேட்டு, அவர்கள் மட்டுமல்ல சிவாவும் அதிர்ந்து நின்றான்.


அன்று


  சித்ராவின் பெற்றோர்கள் அவளை தங்களுடன் சேர்த்துக் கொண்டாலும், உறவினர்கள் வட்டாரத்தில் அதை தெரியப்படுத்தவில்லை. அவர் ஜாதி கட்சி தலைவராக இருப்பதால் இது பேசு பொருளாக ஆகிவிடும் என்று, ரகசியமாகவே அவளை சந்தித்து வந்தனர். 


    அவளது அண்ணனுக்கும் இவளின் திருமண விஷயம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவன் போர்க்களத்தில் இருந்த காரணத்தால் லேட்டாக தான் செய்தி சென்று சேர்ந்தது. உடனே தனது தங்கைக்கு அழைத்து பேசியவன் அவள் சந்தோசமாக வாழ்க்கை நடத்துவதை அறிந்து மகிழ்ச்சி கொண்டான். அவள் கணவனிடம் பேசிவிட்டு தான் வைத்தார்.


  அந்த வருடம் கொரோனா என்ற கொடிய நோய் பரவியதால், கூட்டம் கூடக் கூடாது என்று தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதனால் சிவா அதைப்பற்றி கேட்டு வர சென்னை நோக்கி கட்சி அலுவலகத்திற்கு  சென்றுவிட்டான்.


சித்ரா கருவுற்றிருந்ததால் அதை அரசாங்க மருத்துவமனையில் பதிவு செய்ய, அவளுக்கு துணையாக ரேகாவும் உடன் வந்திருந்தாள். அங்கு வந்த அனைவரும் நர்ஸ்களின் கைகளால் ஊசியினை போட்டுக் கொண்டிருக்க, கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் ரேகா அவளிடம், டாக்டர் தனக்கு தெரிந்தவர் தான், நாம் அவரை நேராக சென்று பார்க்கலாம் என்று கூறி, சித்ராவை  அழைத்துக்கொண்டு நேராக டாக்டரின் அறைக்கு சென்றாள். அங்கு அவளை பரிசோதித்த டாக்டர் தாமோதரன் அவளின் உடல்நிலை சற்று பலவீனமாக இருப்பதாகவும், அதற்கு தான் கொடுக்கும் மருந்துகளை சரியாக உண்டு வரவேண்டும் என்று கூறினார்.


      பிறகு அவளுக்கு நான்கு மாதங்களுக்கான ஊசியை அவளின் கைகளில் போட்டு விட்டார். பிறகு இன்னொரு கைகளிலும் சத்து ஊசி என்று கூறி, இன்னொரு ஊசியை செலுத்தினார்.


    சித்ரா குனிந்து கைகளை தேய்த்து விட்டுக் கொண்டிருக்க, டாக்டர் தாமோதரன் கட்டைவிரலை ரேகாவை நோக்கி உயர்த்தி காட்டினான், அவளும் சித்ரா கவனிக்காதவாறு கண் சிமிட்டினாள்.


    தனக்கு ஒரு மாதிரி இருப்பதாக சித்ரா கூற, அவளை ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்து வந்து, வீட்டில் விட்டுவிட்டு ரேகா தனது வீட்டுக்கு சென்று விட்டாள்.


  அவளின் முகம் சோர்வாக இருப்பதைக் கண்ட சாந்தி, சிறிது நேரம் அவளை அறையில் ஓய்வு எடுக்குமாறு கூற, சித்ராவும் அவளது கட்டிலில் சென்று படுத்துக்கொண்டாள்.


சிறிது நேரத்திலேயே அவளின் உடல் விறைத்து, அவளின் பார்வை நேர் குத்தி நின்றது. அப்போது அவள் அறையில் பின்பக்க வாசல் வழியாக தாழ்ப்பாளை உள்ளே கம்பிவிட்டு, அதை நீக்கிவிட்டு வந்த நாகலிங்கம் அவள் அருகினில் வந்தான்.


  அவள் அருகில் வந்து அமர்ந்தவன், அவளுக்கு கட்டளையிட ஆரம்பித்தான்.


“சித்ரா இப்போ நான் சொல்றத தான் நீ செய்யப் போறே, உன்ன சுத்தி இருக்கிற துணிமணிகளை கிழிச்சு ஹால்ல கொண்டு போய் வீசு, சமையல் அறைக்கு போய், சீமண்ணைய்யையும் தீப்பெட்டியையும் எடுத்துட்டு வந்து, இந்த துணியில ஊத்தி தீப்பெட்டியால தீயை பத்த வச்சு, அந்த துணி மேல போடு. நீ போட்டிருக்க துணியையும் அந்த நெருப்புக்கு நேரா பிடி , அதை யாராவது தடுக்க வந்தா அவங்க மேலயும் சீமண்ணையை ஊத்து."


    அடுத்த நிமிடமே சித்ரா கீ கொடுத்த பொம்மை போல, தன் அருகில் உள்ள துணிகளை, ஹாலில் கொண்டு போய் போட்டுவிட்டு சமையலறைக்குச் சென்று, சீமண்ணையை எடுத்து வந்து, தான் தூக்கி வீசிய துணிகளின் மீது ஊற்றினால்.


    "என்னை அன்னைக்கு போலிஸ் ஸ்டேஷன்ல தலை குனிஞ்சு நிக்க வைச்சயில்லடி, இனி ஊருக்குள்ள நீ எப்படி தலை நிமிர்ந்து நடக்கறேன்னு நான் பார்க்கிறேன்."


No comments:

Post a Comment