Search This Blog

Followers

Powered By Blogger

Saturday, August 9, 2025

மன்னவரே 80


 

             அத்தியாயம் 80


    பிரதீபன், ஜோதிடர் மற்றும் ரகுநந்தனுடன் அங்கிருந்த ஆற்றைக் கடந்து, பக்கத்து கிராமத்திற்கு வந்து சேர்ந்தான். அமாவாசைக்குள் வாளை கைப்பற்ற வேண்டிய காரணத்தால், அந்த ஊரிலேயே குதிரைகளை தங்களது உபயோகத்திற்கு வாங்கிக் கொண்டு, சிவன் மலையை நோக்கி மூவரும் தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.


  லந்தங்காட்டிற்கு வெளியே ரங்கராஜ பூபதியின் படைகள், ரத்தினபுரியில் இருந்த பிரதீபனுடைய படைகளுடன் தீவிரமாக போரிட்டுக் கொண்டிருந்தது. ராஜகுரு மந்திரங்களை உச்சரித்து தீய சக்திகளை, மகிழபுரியை சேர்ந்த படை வீரர்களின் மீது ஏவினார். ஆனால் அவைகளால் அவர்களை நெருங்க கூட முடியவில்லை.


  இதற்கு மேல் இங்கு இருந்தால் ஆபத்து என்பதை உணர்ந்தவர், ரங்கராஜ பூபதியை படைவீரர்களின் உதவியுடன், கை தாங்கலாக கூட்டிக்கொண்டு, மீண்டும் லந்தங்காட்டில் இருந்த குகையை நோக்கிச் சென்றார்.


  ரஞ்சனியின் உடலில் இருந்த மோகனா, அப்போதுதான் பௌர்ணமி பூஜையை நிறைவு செய்திருந்தால்.


  ராஜகுருவும், ரங்கராஜ பூபதியும் அடிபட்ட காயங்களுடன், படைவீரர்களின் துணையோடு குகையை நோக்கி வருவதை கண்டு, அவர்களிடம் சென்றாள்.


"நான்தான் உங்களை இங்கிருந்து செல்லும் படி கூறினேனே? என்ன ஆனது? இந்த காயங்கள் எப்படி தங்களுக்கு ஏற்பட்டது? ரகுநந்தனும் தந்தையாரும் எங்கே?


ரங்கராஜ பூபதி கோபமாக மறுமொழி கூற வருவதற்கு முன்பே, அவரை தடுத்து விட்டு, ராஜகுரு அவளிடம் பேச தொடங்கினார்.


  "மோகனா நீ கூறியபடி தான் நாங்கள் இங்கிருந்து செல்ல தொடங்கினோம், ஆனால் லந்தாங்காட்டை தாண்டிய சிறிது நேரத்திலேயே, பிரதீபனுடைய படைகள் எங்களை சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்கின, ஒரு கட்டத்திற்கு மேல் எங்களால் போராட முடியாமல் ரங்கராஜ பூபதி அழைத்துக் கொண்டு வீரர்கள் துணையுடன் நான் இங்கு வந்து விட்டேன்."


"என்ன? ராஜகுரு என்ன கூறுகிறீர்கள் தீயசக்திகளை அவர்களின் மீது ஏவிவிட வேண்டியது தானே?"


  "மோகனா நான் அதை செயல்படுத்தி இருக்க மாட்டேன் என்று நினைக்கின்றாயா? நான் ஏவி விட்ட ஏவல்கள் அவர்களை நெருங்கும் முன்பே அலறி அடித்துக் கொண்டு விலகி ஓடிவிட்டன. ஏதோ ஒரு மாய சக்தி அவர்களை காத்து நிற்பது போல் எனக்குத் தோன்றியது, உன் தந்தையும் வீரர்களுடன் சண்டையிட்டுக் கொண்டே எங்களை விட்டு வெகு தூரம் தள்ளிச் சென்று விட்டார். ரகுநந்தன் எங்கு சென்றான் என்றே தெரியவில்லை, ஒரு கட்டத்திற்கு மேல் அங்கு இருப்பது, ஆபத்து என்று உணர்ந்துதான் ரங்கராஜனை அழைத்துக் கொண்டு இங்கு வந்து விட்டேன்."


  "என்ன?.... ரகுநந்தன் எங்கு சென்றான் என்று தெரியவில்லையா? அவனை வைத்துத்தான் ரஞ்சனியை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றேன், அவனுக்கு நமது திட்டங்கள் அனைத்துமே தெரியும், ஒருவேளை மகிழபுரிக்கு சென்று யாரிடமாவது என்னைப் பற்றிய உண்மைகளை அவன் உளறிவிட்டால் என்ன செய்வது? உங்களை நம்பி ஒரு வேலையை ஒப்படைத்தேன் பாருங்கள் என்னை கூற வேண்டும்."


    ரஞ்சனி தன் கண்களை மூடி தனது மந்திர சக்தியால் ரகுநந்தன் எங்கே இருக்கின்றான் என்று தேட முயற்சி செய்தாள், ஆனால் அவளால் அவன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கவே முடியவில்லை, எவ்வளவு முறை முயன்றும் அவளுக்கு தோல்வியே மிஞ்சியது.


  ஒருபுறம் படைவீரர்களை நெருங்க அஞ்சும் தீய சக்திகள், மறுபுறம்  ரகுநந்தன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கவே முடியவில்லை, தனக்குத் தெரியாமல் தன்னை சுற்றி ஏதோ சூழ்ச்சி நடப்பது போன்று மோகனாவிற்கு தோன்றியது.


   "ராஜகுரு என் அண்ணன் பிரதீபனை அங்கு கண்டீர்களா? அவன் இருந்துமா என் தந்தையை எதிர்த்து, வீரர்கள் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர்?"


"பிரதீபனா? அவனை நான் அங்கு பார்க்கவே இல்லை. அவனது படை வீரர்கள் மட்டுமே எங்களை சூழ்ந்து இருந்தனர்."


  மோகனா மறுபடியும் கண்களை மூடி இப்போது பிரதீபன் இருப்பிடத்தை அறிய முயன்றாள். இப்போதும் அவள் கேள்விக்கான விடை தான் இன்னும் அவளுக்கு கிடைக்கவே இல்லை. 


  ஒரு முடிவுடன் கண்களை மூடி மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கினால், அடுத்த நிமிடம் இரண்டு யட்சிணிகள் அவள் முன்பு தோன்றி, அவளை வணங்கி நின்றனர்.


  "நீங்கள் இருவரும் இப்போதே சென்று ரகுநந்தன் மற்றும் பிரதீபன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து வாருங்கள். ரகுநந்தனை உயிரோடோ அல்லது பிணமாகவோ என்னிடம் இழுத்துக் கொண்டு வருவது உங்கள் பொறுப்பு, அவர்களை கண்ட அடுத்த நிமிடமே எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். புரிகிறதா? ம்ம்ம்... செல்லுங்கள்."


அவைகள் அவளை வணங்கி விட்டு, உடனே ரகுநந்தனையும் பிரதீபனையும் தேடி பறந்து சென்றது.


  "மோகனா இன்னும் ஏன் அமைதியாக இருக்கின்றாய்? உடனே லந்தங்காட்டிற்கு வெளியே சென்று, அங்கு நமது படைகளை தாக்கிக் கொண்டிருக்கும் மகிழபுரியை சேர்ந்த படைவீரர்களை அழித்துவிடு, எவ்வளவு தைரியம் இருந்தால் நம் மீது தாக்குதல் நடத்தி இருப்பார்கள்."


    "இல்லை சித்தப்பா, இப்போது நான் அங்கு செல்வது உசிதமல்ல, ஏற்கனவே ரகுநந்தனும் பிரதீபனும் எங்கு இருக்கிறார்கள் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் படைகளின் மீது நாம் கை வைப்பது என்னை மகிழபுரியை சேர்ந்தவர்களிடம் காட்டிக் கொடுப்பது போலாகும். நம்மைச் சுற்றி வேறு ஏதோ மாய சக்தி விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கின்றது, முதலில் அது என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும். அத்தோடு இன்னும் ஒரு பூஜை நமக்கு மீதம் உள்ளது, அதற்கு முன்பே நமது சக்திகளை வெளிக் காட்டினாள், அவர்கள் சுதாரித்து விடுவார்கள். இப்போதைக்கு பதுங்கி இருப்பது தான் நமக்கு நல்லது. நீங்கள் அனைவரும் சிறிது நேரம் பதுங்கு குழியில் பதுங்கியிருங்கள், எப்படியும் உங்களை தேடி மகிழபுரியை சேர்ந்த படைவீரர்கள் இங்கு வருவார்கள், நான் அவர்களை எப்படியாவது இங்கிருந்து அழைத்துச் சென்று விடுகிறேன், பிறகு தாங்கள் அனைவரும் லந்தக்காட்டை ஒட்டிய மலை மீது பயணித்து, மேக காட்டிற்குள் சென்று, அங்கு வாழும் மக்களுடன் சிறிது நாட்கள் அங்கேயே தங்கியிருங்கள். மேற்கொண்டு செய்ய வேண்டியவற்றை நான் மடல் மூலம், தங்களுக்கு தகவல் அனுப்புகிறேன்."


வெளியே படைவீரர்கள் வரும் சத்தம் கேட்க, மோகனா உடனே அவர்களை காலக்கோடரின் சிலைக்குப் பின்பு இருந்த, பதுங்கு குழிக்கு அனுப்பி வைத்தாள்.


  பிரதீபனுடைய படைத்தளபதி, வீரர்களுடன் விஜயேந்திர பூபதியே இழுத்துக் கொண்டு குகையை நோக்கி முன்னேறி வந்தார். அப்போது திடீரென்று குகையில் புகைமூட்டம் உண்டானது, அந்த நேரத்தில் மோகனா தமது மந்திர சக்தியால் வீரர்களுடன் இருந்த விஜயேந்திர பூபதியை, பதுங்கு குழியை நோக்கி அனுப்பி வைத்தாள்.


   புகைமூட்டம் நீங்கியதும் வீரர்கள் அங்கு கண்டது, காலகோடரின் சிலைக்கு கீழே கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், தரையில் படுத்திருந்த ரஞ்சனியை தான்.


  அவளை நோக்கி வந்த தளபதி, அவளது கை,கால் கட்டுகளை அவிழ்த்து விட்டு, தாங்கள் எவ்வாறு இங்கு வந்தீர்கள் என்று விசாரித்தார். 


  அதற்கு அவள், அரசரின் கட்டளைப்படி பௌர்ணமி பூஜை செய்ய ஜோதிடருடன் கோயிலுக்கு வந்ததாகவும், அப்போது இவர்கள் தன்னை இங்கு கடத்தி வந்து விட்டதாகவும் கூறினாள்.


"தாயே ஜோதிடருடனா வந்திருந்தீர்கள்? நாங்களும் அந்த ஜோதிடரின் உதவியால் தான் இந்த காட்டை வந்தடைந்தோம். அவர்தான் அரசர் பிரதீபருக்கு முக்கியமான அலுவல் வந்து விட்டதால், அவர் தற்போது இங்கு வர முடியாது என்றும், தளபதியை முன்னிறுத்தி தாக்குதலைத் தொடங்குமாறு உத்தரவிட்டதாகவும் கூறினார். அத்தோடு,  நாங்கள் போருக்கு தயாராவதற்கு முன்பு, எங்களுக்கு அந்த ஈசனின் அருள் பெற்ற, திருநீறை, வெற்றி திலகமாக எங்கள் நெற்றியில் இட்டு, அவர்தான் எங்களை இங்கு அழைத்து வந்தார்.  இல்லையென்றால் எங்களால் இந்தக் காட்டின் உள்ளே பிரவேசித்திருக்கவே முடியாது."


அப்போதுதான் தளபதி அங்கு விஜயேந்திர பூபதி இல்லை என்பதையே உணர்ந்தார், உடனே ஒரு குழுவை காட்டினுள் அனுப்பி அவனை கைது செய்து பிடித்து வருமாறு உத்தரவிட்டுவிட்டு, ஒரு பல்லக்கில் ரஞ்சனியை அமர்த்தி, மீதம் இருந்த  வீரர்களுடன் மகிழபுரியை நோக்கி தங்கள் பயணத்தை தொடங்கினார்.


  மகிழபுரியில் அரண்மனையை நோக்கி சென்று கொண்டிருந்த மித்ரனுக்கு, வழியில் இறந்து கிடந்த ஒரு பச்சை கிளியினை கண்டு, ஒரு யோசனை தோன்றியது.


  "ரஞ்சனி நீ இங்கு தான் இருக்கின்றாய் என்று என்னால் உணர முடிகின்றது, நீ இவ்வாறு ஆன்மாவாக அரண்மனைக்குள் உலா வந்தால், மோகனா நிச்சயம் உன்னை கண்டுபிடித்து விடுவாள், பிறகு அவளை  அழிப்பதற்க்காக நாம் செயல்படுத்த போகும் திட்டம் எல்லாம் பாழாகிவிடும். அதனால் மனதில் கொற்றவை அன்னையை நன்கு வேண்டிக் கொண்டு, அதோ அங்கு இறந்து கிடக்கும் பச்சைக்கிளியின் உடலுக்குள் உன் ஆன்மாவை புகுத்திக் கொள்ள முயற்சி செய்."


  ரஞ்சனியும் மித்ரன் கூறியதை புரிந்துகொண்டு, இறந்து கிடந்த அந்த கிளியின் உடலுக்கு அருகில் சென்றாள். பின்பு, மனதார கொற்றவை தேவியை வணங்கி விட்டு, தனது ஆன்மாவை அந்த கிளியின் உடலுக்குள் செலுத்தினாள். சிறிது நேரத்திலேயே சிறகடித்து பறந்து வந்து, பச்சைக்கிளி ரூபத்தில் மித்ரனின் தோள்களில் அமர்ந்து கொண்டாள்.


  மகிழபுரியின் தெருக்களில், தீய சக்திகள் மனித உயிர்களின் இரத்தத்தை குடித்து, தமது கோரத்தாண்டவத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தன. வீதிகள் தோறும் மரண ஓலம் விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது.


அவைகளுக்கு அஞ்சி, வீட்டுக்குள் பதுங்கி இருந்த ஒரு சில உயிர்களும், தம்மை காப்பாற்றும் படி, கொற்றவை அன்னையின் பெயரை விடாமல் உச்சரித்துக் கொண்டிருந்தனர்.


  குருந்தங்காட்டிற்குள் கருவறையில் இருந்த கொற்றவை தேவியின் முகம் மகிழபுரி மக்கள் படும் இன்னலை கண்டு, கோபத்தால் சிவந்து கொண்டே சென்றது, அவர் கண்களில் இருந்து வந்த மின்னல் கீற்றானது, அவருக்கு எதிரே மண்டியிட்டு கண்கள் மூடி, அவரை வணங்கிக் கொண்டிருந்த மதுராவின் மீது பாய்ந்தது.


  அடுத்த நொடி அவள் கண்களை திறந்த போது அவள் முழுதாக அந்த கொற்றவை அன்னையாகவே மாறி இருந்தால். கண்களில் நெருப்பு மின்ன மகிழபுரியை நோக்கி செல்லத் தொடங்கினாள்.

No comments:

Post a Comment